districts

img

வீடுகளுக்குள் மழைநீர்: சாலை மறியல்

அரக்கோணம்,நவ. 14- ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சி செந்தில் நகரில் ஞாயிற்றுக்கிழமை (நவ. 13) இரவு முழுவதும் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் அந்த பகுதியை மழைநீர் சூழ்ந்த தால் பொதுமக்கள் வீடு களை விட்டு வெளி யேற முடியாமல் அவதிப் பட்டனர். மழைநீரை வெளியேற்ற வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத தால் 50க்கும் மேற்பட்டோர் அரக்கோணம் திருத்தணி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரக்கோணம் வட்டாட்சியர் சண்முகசுந்தரம், கைனூர் ஊராட்சி மன்றத் தலைவர் உமா மகேஷவரி, காவல் துறையினர் சாலை மறி யலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கைனூர் செந்தில் நகரிலிருந்து வெளி யேறும் மழைநீர், கால்வாய் முலம் வடமாம்பாக்கம் ஏரிக்கு செல்ல வேண்டும். ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து பலரும் வீடு கட்டியுள்ளனர். ஆக்கிர மிப்புகளை உடனடியாக அகற்றி தேங்கிய மழைநீரை வெளியேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆக்கிர மிப்புகளை அகற்ற நட வடிக்கை எடுப்பதாக வரு வாய்த் துறையினர் உறுதி அளித்ததையடுத்து மறியல் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.