ராணிப்பேட்டை, ஜூன் 15 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பாரத் மிகுமின் நிறுவ னம் நுழைவாயில் முன்பு வெள்ளியன்று (ஜுன் 14) மூன்று அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய பணியாளர்களை தேர்வு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். லாப பங்கிட்டு போனஸ் தொகையை தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும். தில்லி யில் தொழிற்சங்கங்களுக் காக நடத்தப்படும் கூட்டு ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத் தப்பட்டது.
தொழிற்சாலை நிர்வாகத் தின் கவனம் ஈர்க்கும் வகை யில் நுழைவாயில் முன்பு தொழிலாளர்கள் கோரிக்கை களை முழங்கி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.