ராணிப்பேட்டை, ஜூன் 7 - ராணிப்பேட்டை மாவட்டம், கலவை வட்டத்தில் உள்ள வாழைப்பந்தல் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் உள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக மின்சாரம் சரியாக விநியோகம் செய்யாத காரணத்தினால் கைத்தறி நெச வாளர்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்ற னர்.
இது தொடர்பாக வாழைப்பந்தல் மற்றும் மாம்பாக்கம் மின்சார வாரிய அலு வலகத்தில் பலமுறை அதிகாரிகளை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கை யும் எடுக்காமல் தொடர்ந்து மின்தடை ஏற்படு வதால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் நெசவாளர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலவை தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு தலைமையில் வாழைப்பந்தல் துர்க்கை அம்மன் கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த மறியல் போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் கலந்து கொண்டனர். வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர், மின்சார வாரிய அதிகாரிகளிடம் கைத்தறி நெசவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தையில் உடனடியாக மின் விநியோக குளறுபடிகளை சரி செய்து, மின்சார விநியோகம் தடை இல்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாம்பாக்கம் மின்வாரிய உதவி பொறியாளர் மாபு உசைன், இளநிலை பொறியாளர் செந்தில் குமார் ஆகியோர் உறுதி அளித்ததன் பேரில் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.