districts

img

தரமற்ற தொகுப்புகள்: ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ராணிப்பேட்டை, நவ.11 - ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொகுப்பு வீடு களை தரமற்றதாக கட்டிக்கொடுத்த ஒப்பந்த தார்கள் மீது உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை தீர்வு கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் வலியுறுத்தினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று (நவ.11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் பங்கேற்கவில்லை. கீழ் மட்ட அதிகாரிகளை பெயருக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதற்கு விவசாயிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, பேசிய மாவட்ட வருவாய் அலுவலர், அடுத்த கூட்டத்தில் துறை சார்ந்த மாவட்ட அதிகாரிகள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்” என்றார். இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எல்.சி.மணி பேசுகையில், “பூட்டுத் தாக்கு பகுதியில் சிஎம்சி மருத்துவமனை அமைக்க உள்ள  பெரிய அளவிலான ஆழ்துளை கிணறுகளால் சுற்று வட்டார கிணறுகள், ஆழ்துறை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விடும்”என்றார். சிஎம்சி வளாகத்திற்குள் அரசு புறம்போக்கு நிலம், குளம், குட்டை, நீர்வழி கால்வாய், பாதைகள் ஆக்கிர மிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை முழுமையாக மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொகுப்பு வீடுகளை தரமற்றதாக கட்டியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதிய தொகுப்பு வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும்  என மணி கோரிக்கை விடுத்தார்.