districts

img

கனமழை காரணமாக வாழை மரங்கள் நீரில் மூழ்கி சேதம்

மேட்டுப்பாளையம், ஜூலை 27- மேட்டுப்பாளையத்தில் வெள்ளப் பெருக்கில் சிக்கி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் நீரில் மூழ் கிச் சேதமடைந்துள்ளதால் விவசாயி கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். நீர்பிடிப்பு பகுதிகளான மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளை யத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த 22 ஆம் தேதி நள்ளிரவு நிரம்பியது. அணை அதன் முழு கொள்ளளவை எட்டியதால் அணையின் நீர்வரத்தா னது வினாடிக்கு 16 ஆயிரம் முதல் 24  ஆயிரம் கன அடி வரையிலான தண் ணீர் அப்படியே உபரி நீராக பவானி யாற்றில் வெளியேற்றப்பட்டது. இத னால் பவானியாற்றில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதோடு பவானி நீரை ஆதாரமாகக் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயரத் துவங்கியது.

தற்போது பவா னிசாகர் அணையின் நீர்மட்டம் 100 அடியை கடந்த காரணத்தால் அணை யின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள மேட்டுப்பாளையம் தாலுக்கா, சிறு முகை பேரூராட்சிக்கு உட்பட்ட மலை யடிவார கிராமங்களான லிங்கா புரம், காந்தவயல், உளியூர், ஆளூர், காந்தையூர் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இக்கிராமங் களை நகரப் பகுதியோடு இணைக் கும் சாலை மற்றும் இருபது அடி உயர உயர்மட்ட பாலமும் நீருக்கடியில் மூழ் கியதால் போக்குவரத்து துண்டிக்கப் பட்டு இக்கிராமங்கள் தனித் தீவுக ளாக மாறின. மேலும் இப்பகுதியில் விவசாயிகளால் பயிரடப்பட்டிருந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களும் தோட்டங்களின் மின் மோட்டார்களும் நீரில் மூழ்கி சேதமா கியுள்ளது. ஓராண்டு பயிரான வாழை மரங்கள் இன்னும் 4 அல்லது 5 வாரங்களில் அறுவடைக்குத் தயா ராக இருந்த நிலையில் நீரில் மூழ்கிய தால் அதன் வேர்ப் பகுதி அழுகி வீணாகி விட்டது இப்பகுதி வாழை விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தங்களது ஓராண்டு உழைப்பும் முதலீடும் பயனற்று போய் விட்டதால் செய்வதறியாது தவிக்கின்றனர். வெள் ளப்பெருக்கால் சேதமான வாழை களைக் கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96 அடியைக்  கடந்தாலே நீருக்கடியில் மூழ்கத் துவங்கிவிடும் என்பதாவ் லிங்காபுரம் பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை  எடுக்க வேண்டும் என பொதுமக்கள்  அரசுக்குக் கோரிக்கை விடுக்கின்றனர். இணைப்பு சாலையும் பாலமும் நீரில் மூழ்கிவிட்டதால் இப்பகுதி கிராம மக்கள் காட்டாற்று வெள்ளத்தைக் கடக்க ஆபத்தான பரிசல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

;