தமிழகத்தில் உள்ள நகராட்சிகளில் கன்னி யாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித் துறை நகராட்சியில் 21 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களம் காண்கிறது. இவர்களில் மூன்று பேர் இஸ்லாமியர். பத்துப் பேர் கிறித்தவர்கள். 21 வார்டில் 11 வார்டு பெண் களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது தேர்தல் ஆணை யம். இங்கும் கூட அரசு நிர்ணயித்த விகிதத்தை கூட கூடுதல் தொகுதியில் பெண்கள் நிறுத்தப் பட்டுள்ளனர்.
இதை வேறு யார் சாதித்திருக்க முடியும்
குழித்துறை நகராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமைப் பொறுப்பில் இருந்தபோது எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் 67 பேருக்கு நகராட்சியில் வேலை வழங்கப்பட்டது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தான் சாத்தியமானது என்பதை மாற்றுக் கட்சியினர் கூட ஒப்புக்கொள்கின்றனர்
மின்னல் வேக மினிக் கூட்டம்
குழித்துறையில் வழக்கறிஞராகப் பணிபுரிப வர் மோகன்குமார், சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு குழித்துறை தேர்தல் காரியாலாயத்தில் அமர்ந்திருந்தார். கிட்டத்தட்ட 50 தோழர்கள் ஒன்பது மணிக்குள் வந்தனர். அவர் கேட்ட முதல் கேள்வி ‘‘உண்ணு கழிஞ் சுதா’’ என்று. இல்லை என்றவர்களை உடனடி யாக ‘‘உண்ணு கழிஞ்சு’’ வா என்றார். அனைவ ரும் உணவருந்தி வந்தவுடன் மாதவன் என்பவர் தலைமையில் ஒரு மினி கூட்டம். வந்திருந்தவர்க ளை வார்டுகளுக்கு பிரித்து அனுப்பினர். சில தோ ழர்கள் இன்று சாத்தியமில்லை எனக் கூற... வாக்கு கேட்க ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். உடனடியாக பணியை தொடங்குங்கள் என மோகன்குமார் அன்பாக கடிந்துகொள்ள சம் பந்தப்பட்ட வார்டு தோழர்கள் வந்து தோழர்க ளை அழைத்துச் சென்றனர். சிலர் வாக்குச் சேகரிக்க அனுப்பி வைத்தனர்.
குழித்துறை உணவகம்
குழித்துறையில் உள்ள ஒரு உணவ கத்தில் சனிக்கிழமை பிற்பகல் மூன்று மணியள வில் நான்கு பெண்கள் அமர்ந்து பேசிக்கொண்டி ருந்தனர். அவர்கள் நம்ம வார்டில் கம்யூனிஸ்ட் வெற்றி பெறும். பிரதான மாநிலக் கட்சி வெற்றி பெறாது என்றனர்.
ஜாகிர் உசைன் எங்கள் குடும்பத்தில் ஒருவர்
குழித்துறை நகராட்சி 21-ஆவது வார்டிற்குட் பட்ட பம்மம் பகுதியில் வசிக்கும் மக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜாஹிர் உசைனுக்கு வாக்குச் சேகரித்து அலிபாத்திமா தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு சென்றது. ஜாகிர்உசைன் எங்களது குடும்பத்தில் ஒருவர். அவருக்கு நாங்கள் உறுதி வாக்க ளிப்போம் என உறுதியளித்தனர். மக்கள் பிரச்ச னைக்காக ஓடோடி வருபவர். பாஜக-வை வீழ்த்து வதே என வாக்காளர்கள் கூறியதாக அலிபாத்திமா நமது செய்தியாளரிடம் சனிக்கிழமை தெரி வித்தார்.
வார்டு மறுசீராய்வு குளறுபடி
குழித்துறை நகராட்சியில் வார்டு மறுவரை யறை என்பது முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. ஆங்கில எழுத்தான ‘Z’ வடிவத்தில் சீராய்வு செய்துள்ளனர். இதில் வேடிக்கை என்னவென் றால் ஒரு தெருவில் பத்து வீடுகள் இருந்தால் தலா மூன்று வீடுகள் மூன்று வார்டுகளில் உள்ளன. இன்னும் நுணுக்கமாக பார்த்தால் ஒரு குடும்பத் தில் நான்கு பேர் இருந்தால் ஒருவருக்கு ஒரு வார்டில் வாக்கும், மற்ற மூவருக்கு வேறு வார்டிலும் வாக்கு உள்ளது.
வெற்றி நிச்சயம்... இதுவே எங்கள் லட்சம்
குழித்துறை நகராட்சியில் அகில இந்திய கட்சி ஒன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோற்க வேண்டுமென்பதற்காக மற்ற கட்சிகளுடன் சேர்ந்து உள் ரவுண்ட் வேலைகளிலும் ஈடு பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி ஒருவர் ‘‘வெற்றி நிச்சயம்... இதுவே எங்கள் லட்சியம்’’ என்றார்
கடமையைச் செய்ய நோட்டு வாங்கமாட்டோம்...
குழித்துறை நகராட்சியில் ஒரு துண்டு நோட்டீஸ் வீடு தோறும் மட்டுமல்ல சாலைகளில் செல்வோரிடமும் விநியோகிக்கப்படுகிறது. அதில், ‘‘உங்களிடம் வாக்கு வாங்க நோட்டு கொடுக்க மாட்டோம். பொய் வாக்குறுதிகளை சொல்ல மாட்டோம். மக்கள் கடமையை செய்ய நோட்டு வாங்க மாட்டோம். முடியாவிட்டால் வெளியே வந்து உங்களோடு நின்று போராடு வோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் தாய் மொழி தமிழில் இருந்தாலும் கேரளத்தையொட்டி பகுதியான குழித்துறையில் கட்சியினர் தமிழும், மலையாளமும் கலந்து நோட்டீசில் உள்ள செய்திகளை எடுத்துக் கூறுவது மற்ற மாவட்ட மக்களுக்கு வியப் பாகத்தான் இருக்கும்.