districts

img

ஜூன் 5 சத்திரப்பட்டியில் விசைத்தறி தொழிலாளர்கள் கஞ்சித் தொட்டி திறக்கும் போராட்டம்

இராஜபாளையம், மே 31- இராஜபாளையம் வட்டம் சத்திரப்  பட்டி பகுதியில் விசைத்தறி தொழிலா ளர்கள் சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த 24-ஆம் தேதி முதல் கூலி உயர்வு கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்தினர் இரண்டாம் கட்ட மாக செவ்வாய்க்கிழமையன்று தொழிலா ளர்கள் கலந்து கொண்ட மகாசபை கூட்டம் நடைபெற்றது. இதற்கு போராட்டக்குழு தலைவர் பழனிவேல் தலைமை தாங்கி னார் மகாசபைக் கூட்டத்தில் வருகிற 5-ந்  தேதிக்குள் கூலி உயர்வு கொடுக்காவிட்டால்  ஜூன் 5 ஆம் தேதி கஞ்சித்தொட்டி திறக்கும்  போராட்டம் நடத்தப்படும் என்று கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது கூட்டத்தில் சிஐடியு சோமசுந்தரம் முனியாண்டி மற்றும் அனைத்து தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.