நாகர்கோவில், மே 1- கீழடி, ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் மண்பாண்டங்களும், கருவிகளும் மனிதகுல வரலாற் றின் தொன்மையை கண்டறிய உதவி வருகின்றன. தொப்புள்கொடி உறவு போல மனித வாழ்விலிருந்து பிரிக்க முடியாதவை மண்பாண்டங்கள். ஆனால், அவற்றை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கை மேம் படவில்லை. பாரம்பரியமான இந்த தொழிலை பாதுகாக்க இயந்திரத் தனமான அரசின் முடிவுகள் உதவ வில்லை. மாறாக தொழிலாளர்களின் வாழ்க்கையை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. மாற்றுத் தொழிலுக்கு செல்லவும் வழியில்லா மல் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பரிதவிப்பில் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் தாழக் குடியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும் பங்கள் மண்பாண்ட தொழிலை நம்பி உள்ளன. மீன் வளர்ப்பு மற்றும் தொடர் மழையால் வற்றாத குளங்கள் புதிய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது. மானாவாரி குளங்களில் இருந்து களி மண், குறுமண் எடுக்க விடாமல் அதி காரிகள் தடுப்பதால் முற்றிலும் முடங்கி கிடக்கிறது
இந்த தொழில். இயற்கையை சிதைக்காமல், மண் வளத்தை பாதுகாக்கும் இந்த தொழி லின் நுட்பத்தை புரிந்துகொள்ள வேண்டும். மண் மாபியாக்களைப் போல மண்பாண்ட தொழிலாளர் களை அணுகுவதே சிக்கலுக்கு கார ணம் என்கிறார்கள் தொழிலாளர்கள். மண்பாண்ட தொழிலாளியான ஐயப்பன் கூறுகையில், அறுவடை முடிந்து கோடை காலம் வந்ததும் குளங்கள் வறண்டு கிடக்கும். அதன் மேற்பகுதியில் தேங்கிய வண்டல் மண்ணை விலக்கிவிட்டு களிமண் எடுப்போம். ஆழத்தில் கிடைக்கும் மண் இந்த தொழிலுக்கு உதவாது. நாங்கள் மண் எடுப்பதால் குளத்தின் இயல்புநிலை பாதிக்கப்படுவ தில்லை. மாறாக சீரான பராமரிப்புக்கே உதவுகிறது. அப்படித்தான் குளங் கள் தொன்றுதொட்டு பாதுகாக்கப் பட்டு வருகின்றன. நேரடி வணிக நோக் கத்துக்காக மண்ணும் மணலும் எடுப்ப வர்களால் குளங்களின் ஆழம் அதிக ரித்து பாசனத்துக்கு உதவாத நிலை ஏற்படும். எங்களது தொழிலுக்கு களி மண் எடுப்பதை இதிலிருந்து வேறு படுத்தி பார்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும். குளங்களை குத்தகைக்கு விட்டு மீன் வளர்ப்பது மற்றொரு பிரச்சனை. மீன் குத்தகைதாரர்கள் குளம் வறண்டுவிடாமல் இருக்க பாசன கால்வாயில் வரும் தண்ணீரை பயன் படுத்துகிறார்கள்.
இதனால் ஆண்டு முழுவதும் நீர்நிரம்பிக் கிடப்பதால் களிமண் எடுக்க முடியாத நிலை ஏற் படுகிறது. களிமண் எடுக்க பயன்படும் குளங்களை மீன் வளர்க்க குத்த கைக்கு விடும்போது கோடை காலத் தில் கால்வாய் நீரை பயன்படுத்த கூடாது என்கிற நிபந்தனை விதிக்க வேண்டும். குளம் வற்ற அனுமதிக்க வேண்டும். குறிப்பிட்ட ஒரு குத்தகை தாரர் ஆதாயம் பெற நூற்றுக்கணக் கான மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பங்களை பட்டினிக்கு தள்ளி விடக் கூடாது என்றார். முத்துக்குமார் கூறுகையில், இப்போது வில்லச்சேரி, புலியூர் குறிச்சி போன்ற சில குளங்கள் வறண்டுள்ளன. மழைக்காலம் வரு வதற்குள் களிமண்-குறுமண் எடுக்க அனுமதித்தால் மட்டுமே அடுத்த ஓராண்டுக்கு நாங்கள் தொழில் செய்ய முடியும். செங்கல் சூளைக்கு மண் எப்பவர்களுக்கும் எங்களுக்குமான வேறுபாட்டை அதிகாரிகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத் தின் மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் கூறுகையில், மானாவாரி குளங்களில் களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையிட்டு உதவ வேண்டும். இதுகுறித்து ஏற்க னவே மனு கொடுத்து மாவட்ட ஆட்சி யரிடம் பேசியுள்ளோம். கால தாம தத்துக்கு இடமளிக்காமல் மண் பாண்ட தொழிலாளர்களையும், தொழி லையும் பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.
வீணாகிப்போன ஒரு கோடி
குமரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசால் மண் அரைக்கும் எந்திரம் வழங்கும் திட்டம் ஒரு கோடி ரூபாய் மதிப் பீட்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. எதற்கும் பயன்படாத நிலையில் இந்த இயந்திரங்கள் காட்சிப்பொருளாக வீடுகளில் வைக்கப்பட்டுள்ளன. எந்திரங்களை திருப்பி எடுத்துக்கொண்டால் சட்டிபானை வைக்க கொஞ்சம் இடமாவது மிச்சமாகும் என்கிறார்கள் தொழிலாளர்கள். திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சியில் ரூ.60 லட்சம் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கட்டிடம் கட்டி கொடுத்திருக்கிறார்கள். அதுபோல் தாழக்குடி மண் பாண்ட தொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு சொந்த மான 13 சென்ட் நிலம் உள்ளது. இதில் ஒரு கட்டிடம் கட்டி தொழில் செய்ய மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்த னர்.
இன்று ஆர்ப்பாட்டம்
களிமண்-குறுமண் எடுக்க அனுமதி கோரி திங்களன்று (மே 2) காலை 10 மணிக்கு நாகர் கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த மண்பாண்ட தொழிலாளர் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மும் அழைப்பு விடுத்துள்ளன.