districts

கொலை செய்யும் நோக்குடன் சிபிஎம் நிர்வாகி சகாய அந்தோணியை தாக்கிய வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மதுரை, ஜன. 25-  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்டக்குழு உறுப்பினர் சகாய அந்தோ ணியை கொலை செய்யும் நோக்குடன் தாக்கிய வழக்கு விசாரணையை சிபிசிஐடி க்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து குமரி மாவட்டம் திருவட்டார் பகுதியைச் சேர்ந்த சகாய அந்தோணி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “நான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட உறுப்பினராக உள்ளேன். திருவட்டார் பஞ்சா யத்து யூனியன் ஒன்பதாவது வார்டின் கவுன்சிலராகவும் உள்ளேன். உள்ளாட்சி தேர்தலில் நடந்த நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, தவறுதலாக திமுகவைச் சேர்ந்த ஜான் ரைட் என்பவர் என் மீது விரோதம் கொண்டு பலவித தொந்தரவுகளை தந்து கொண்டிருந்தார்.  இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி  நான் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் என்னை வழிமறித்து கொலை செய்யும் நோக்கில்  பயங்கர ஆயுதங்களால்  தாக்கினர். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி விழுந்தேன்.  

தொடர்ந்து திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கு மேலாக சிகிச்சை பெற்றேன். அங்கு கோமா நிலையில் இருந்தேன். நினைவு திரும்பிய பிறகுதான் எனக்கு என்ன நடந்தது என்று தெரியவந்தது.   இது குறித்து நான் காவல் நிலையத்தில் புகார் செய்தேன்.  இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டார். விசார ணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை  சிபிசிஐடிக்கு மாற்றி உத்தர விட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை ஜனவரி 25 செவ்வாயன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்  முன்பு நடைபெற்றது.அப்போது, இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனு முன்னுக்குப்பின் முரணாக உள்ளது.  விசாரணை அதிகாரி யும் மாற்றப்பட்டுள்ளார். எனவே இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.