districts

img

பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுமா? அமைச்சர் விளக்கம்

சென்னை,ஏப்.18- தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என்று அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாயன்று(ஏப்.18) கேள்வி நேரத்திற்கு பிறகு, “பால்கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எம். சின்னதுரை பேசுகையில்,“தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தி என்பது பிரதான தொழி லாக இருந்து வருகிறது. பால் உற்பத்தி  என்பது கிராமப்புறங்களில் குடிசைத் தொழிலாகும். கிராமப்புறங்களில் கால் நடைகளை நம்பித்தான் ஏராளமான குடும்பங்கள் வாழ்கின்றன.  தற்போது, பால் உற்பத்திக்கான பராமரிப்பு செலவு அதிகரித்துள்ளது. தீவனங்களின் விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு 38 லட்சம் லிட்டராக இருந்த  பால் உற்பத்தி, தற்போது 25 லட்சம் லிட்டராக குறைந்துவிட்டது.  எனவே, பால் உற்பத்தியை அதி கரிக்கவும், கால்நடைகளுக்கான தீவனங்களின் செலவை சமாளிக்கவும் பால் உற்பத்தியாளர்களிடம் கொள் முதல் செய்யும் பால் லிட்டர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 10 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும்”என்றார்.

அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவை போன்று பால் உற்பத்தி யாளர்களுக்கு ஊக்கத் தொகை ரூ. 5 வழங்க வேண்டும் என்றும் பால்  கொள்முதல் விலையை குறைந்த பட்சம் ரூ.7 உயர்த்த வேண்டும் என்று கே.பி. முனுசாமி(அதிமுக),ஜே.ஜி.பிரின்ஸ் (காங்.), டி.ராமச்சந்திரன் (சிபிஐ), வேல்முருகன், ஈ.ஆர்.ஈஸ்வ ரன் ஆகியோரும் வலியுறுத்தினர். இதற்கு பதிலளித்து பேசிய பால் வளத்துறை அமைச்சர் நாசர், “தமிழ்நாட்டில் கிராமப்புற பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங் கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் தேதி பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3  உயர்த்தப்பட்டது. இதனால், நாள் ஒன்றுக்கு  சுமார் ஒரு கோடி ரூபாய்க் கும் அதிகமாக நிதிச்சுமை ஏற்பட்டது.  இருந்தாலும் அதையும் தாங்கிக் கொண்டுதான் சேவை நோக்கத்து டன் செயல்பட்டு வருகிறது”என்றார். கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் ஏற்பட்ட நோய் தாக்கமும், மாடுகளின் பலியும் அந்த மாநிலங்களில் பால்  உற்பத்தியை வெகுவாக பாதித்தது. தமிழ்நாட்டில், நோய் தாக்கம் இல்லை  என்பதால் பால் உற்பத்தி அதிகமாக  உள்ளது. தனியார் நிறுவனங்கள் லிட்ட ருக்கு ரூ. 5 அதிகமாக கொடுத்து பால் உற்பத்தியாளர்களிடம் நேரடியாக பால் கொள்முதல் செய்து வெளி மாநிலங்களுக்கு அனுப்புகிறார்கள். தற்போதுள்ள நிலையில், பால் கொள்முதல் விலையை 7 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை வைத்து போராடி வருகிறார்கள். பால்  கொள்முதல் விலையை உயர்த்துவது அரசின் கொள்கை முடிவாகும். எனவே,  இதுகுறித்து முதலமைச்சரின் கவ னத்துக்கு கொண்டு சென்று முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்தார்.