districts

img

மார்க்கம்பட்டியில் அமைக்கப்பட்ட புறக்காவல்நிலையம் திறக்கப்படுமா?

ஒட்டன்சத்திரம், பிப்.15-  ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டியில் பூட்டியே கிடக்கும் புறக்காவல்நிலையத்தை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மார்க்கம்பட்டிக்கு அருகே உள்ள கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் வந்து செல்வார்கள்.  குறிப்பாக மாம்பாறையில் உள்ள முனியப்பசுவாமி கோவி லுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏரளாமான பக்தர்கள் வந்து கிடாய் வெட்டி வழிபாடு நடத்திச்செல்வார்கள்.குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக மாவட்டத்தில் எல்லை பகுதி யும் முக்கியத்துவம் வாய்ந்த மார்க்கம்பட்டியில் இடையன்  கோட்டை காவல் நிலையம் சார்பில்  புறக்காவல் நிலையம்  அமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் ஆகியும் புறக்  காவல் நிலையம் திறக்கப்படாமல் உள்ளது. எனவே புறக்காவல்  நிலையத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.