districts

img

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை எப்போது கட்டி முடிப்பீர்கள்? எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க மோடி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, ஆக. 29 - தமிழ்நாட்டில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி ஒன்றிய பாஜக அரசு அறிவித்தது. எனினும், அடிக்கல் நாட்டுவதற்கே 4 ஆண்டு களைக் கடத்தியது. 

2019 மக்களவைத் தேர்தலையொட்டி, மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவம னையைக் கட்டுவதற்கு பிரதமர் மோடி அவசர அவசரமாக அடிக்கல் நாட்டினார். ஆனால், அதன் பிறகும் வழக்கம்போல கண்டு கொள்ளவில்லை. தோப்பூரில் சுற்றுச்சுவரைத் தவிர, வேறெந்தக் கட்டுமானப் பணிகளும் நடக்கவில்லை.

மதுரையோடு சேர்த்து அறிவிக்கப்பட்ட பிற மாநிலங்களுக்கான எய்ம்ஸ் மருத்துவ மனைகள் கட்டி முடித்து செயல்பாட்டுக்கு வந்தே 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், மதுரை  எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் மட்டும் எப்போது தொடங்கும்? என்பது விடை தெரியாத கேள்வி யாக தொடர்கிறது. மதுரை மக்களவை உறுப்பி னர் சு. வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பலமுறை கேள்வி  எழுப்பியும் உரிய நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், பாஸ்கர் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு  ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு வியாழனன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வில் விசார ணைக்கு வந்தது. 

அப்போது, “அடிக்கல் நாட்டப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது தான் கட்டி  முடிக்கப்படும்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, கொரோனா தொற்று ஊர டங்கால் கால தாமதம் ஏற்பட்டது, கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது, 2026-க்குள் பணிகள் முடிந்துவிடும் என்று ஒன்றிய அரசு விளக்கம் அளித்தது.

அதற்கு, “கொரோனா தொற்று எல்லாம் 2022-ஆம் ஆண்டே முடிந்து விட்டது, அதை யெல்லாம் காரணம் காட்டாதீர்கள்” என காட்ட மாக கூறிய நீதிபதிகள், “மதுரை எய்ம்ஸ் கட்டு மானப் பணிகள் எப்போது தொடங்கி, எப்போது முடியும் என்பது தொடர்பாக, ஒன்றிய சுகா தாரத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வ அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை யை செப்டம்பர் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த னர்.