districts

img

“எம்ஆர்பி செவிலியர்கள் கோரிக்கைகள் எப்போது நிறைவேறும்”

மதுரை, செப்.10- எம்பிஆர்பி செவிலியர் களின் கோரிக்கைகளைத் தமிழக அரசு விரைந்து நிறை வேற்ற வேண்டுமெனத் தமிழ்  நாடு எம்ஆர்பி செவிலியர் கள் மேம்பாட்டுச் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. மதுரையில் இச்சங்கத் தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் ஞாயிறன்று நடை பெற்றது. பின்னர் மாநிலப் பொதுச் செயலாளர் நே. சுபின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளில் சுமார் 10,000 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரி யத்தின் போட்டித் தேர்வு மூலம் முறையாக பணிய மர்த்தப்பட்டு நான்கு முதல் எட்டு வருடங்கள் ஒப்பந்த முறையில் பணி செய்து வரு கின்றனர், பணியில் இணை யும் போது இரண்டு வருடத்  தில் பணி நிரந்தரம் செய் யப்படும் என்று பணி நியமன ஆணை வழங்கப்பட்டது,  ஆனால் இன்று வரை மிக வும் குறைவான எண்ணிக் கையில் மட்டுமே செவிலி யர்கள் பணி நிரந்தரம் பெற்  றுள்ளனர்.  கொரோனா காலகட்டத் தில் சிகிச்சை வழங்கப் போட்டி  தேர்வின் மூலம் பணிய மர்த்தப்பட்ட செவிலியர்கள் சுமார் 2,500 பேர் இரண் டரை ஆண்டுகள் பணி முடித்த பின் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஒரே நாளில் பணி நீக் கம் செய்யப்பட்டுள்ளனர். இந்திய மருத்துவக் கழ கம்  மற்றும் இந்திய பொதுச் சுகாதார தர நிர்ணயங்கள்  ஆகியவற்றின் பரிந்துரை களின் படி நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப செவி லியர்கள் எண்ணிக்கை இல்லை. இந்திய மருத்து வக் கவுன்சில் பரிந்துரை களின் படி நிரந்தர தன்மை யுடைய செவிலியர் பணி யிடங்கள் உருவாக்கினால் இன்னும் தரமான சிகிச்சை வழங்க முடியும். சுகாதாரக் கட்டமைப்பில் தமிழகம் முத லிடத்தில் உள்ளது. ஆனால் பணியாளர்கள் விஷயத்தில் 28-ஆவது இடத்தில் உள்ளது. போதுமான செவிலி யர்கள் இல்லாததால் நோயா ளிகளுக்கு உரிய நேரத்தில் தரமான சிகிச்சையளிப்பதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கக் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண் டும்.  

எம்ஆர்பி தொகுப்பூதிய செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யவேண்டும். புதிய மருத்துவக்  கல்லூரி மருத்துவமனை களில் இரண்டாம் கட்ட செவி லியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதன் மூலம் 467  செவிலியர்களின் பணியி டங்கள் உறுதிப்படுத்தப் படும்.  கொரோனா கால கட்டத்தில் இரண்டரை வரு டங்கள் பணிபுரிந்து பணி நீக்  கம் செய்யப்பட்ட செவிலி யர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். பொதுச் சுகாதாரத் துறை யில் பணி செய்யும்  மெண்டர்  செவிலியர்  பணியிடங்க ளைச் சரண் செய்து கலைஞர் மருத்துவமனையில் செவிலி யர் பணியிடங்களை உரு வாக்குவதைக் கைவிட வேண்டும். எம்ஆர்பி செவிலியர் களுக்கு மகப்பேறு விடுப் புக்கான ஊதியத்தை வழங்க  வேண்டும். உயர்த்தப்பட்ட ஊதியம் ரூ.18,000 அனைத்து செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும். ஆரம்பச் சுகாதார நிலையங்களில் செவிலியர்களுக்கு வரை யறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி நவம்பர் 10-ஆம் தேதி சென்னை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிடத் திட்டமிட்ட மிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பேட்டியின் போது எம்ஆர்பி செவிலியர் சங்க  மாநிலத் தலைவர் கு.சசி கலா,தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கப் பொதுச் செயலா ளர் ஆ.செல்வம், மதுரை மாவட்டச் செயலாளர் க.நீதி ராஜா, இரா.தமிழ் ஆகியோர்  உடனிருந்தனர்.