திருவில்லிபுத்தூர்,டிச.9- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி யில் நடைபெற்ற அரசு விழாக்களில் கலந்து கொண்டு, பின்னர் கார் மூலம் மதுரைக்குச் சென்றார். அப்போது திரு வில்லிபுத்தூருக்கு வருகை தந்த முதல்வருக்கு திருவில்லிபுத்தூர் நகர், ஒன்றிய கழகம், வத்திராயிருப்பு பேரூர் கழகம் சார்பில் நகர் தேரடி ராமகிருஷ்ணபுரம் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது . நகர் கழக செய லாளர் வழக்கறிஞர் ஜி.ஜி. அய்யாவு பாண்டியன், திரு வில்லிபுத்தூர் ஒன்றிய கழகச் செயலாளரும் ஒன்றிய பெருந்தலைவருமான மல்லி கு.ஆறுமுகம், நகர்மன்ற தலைவர் ரவி கண்ணன் மற்றும் திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் . அப்போது திமுக நிர்வாகிகள் முதல்வருக்கு சால்வை, புத்தகங்கள் கொடுத்து வர வேற்றனர்.