நாகர்கோவில், ஆக.30- கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்காக களை மேலாண்மை மற்றும் சூரிய காந்தி கலப்பு பயிர் சாகுபடி குறித்த பயிற்சி நடைபெற்றது. திருவட்டார் வட்டாரம் பொன்மனை பேரூராட்சி மங்கலம் கிராமத்தில் நடந்த பயிற்சிக்கு வோளாண்மை உதவி இயக்குநர் ஆரோக்கிய அமல ஜெயன் தலைமை வகித்தார். பேச்சிப்பாறை தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் ராஜ் பிரவீன், வட்டார தொழில்நுட்ப மேலாளர் அருண் உள்ளிட்டோர் பேசினர். உதவி வேளாண் அலுவலர் கிருஷ்ண ஜான்சி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் இராஜேஸ்வரி, சுனில் குமார் மற்றும் விவசாய பெருமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.