தேனி, ஏப்.30- மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ் விற்காக வைகை அணை யில் இருந்து வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறக்கப் பட்டது. வருகிற மே மாதம் 5 ஆம் தேதி மதுரை சித்திரை திரு விழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கக்கூடிய கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக ஞாயிறு முதல் ஆறு நாட்களுக்கு வைகை அணையில் இருந்து தண் ணீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்களில் 216 மில்லியன் கன அடி தண்ணீர் இதற்காக வைகை அணை யிலிருந்து திறக்கப்படு கிறது. அணையில் உள்ள ஏழு சிறிய மதகுகள் வழியாக மற் றும் நீர்மின் நிலையம் வழி யாக திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூன்றே நாட்களில் மதுரை வைகை ஆற்றை சென்றடையும் என்று பொதுப் பணித்துறையினர் தெரிவித்துள்ளனர் தற்போதைய நிலவரப் படி மொத்தம் 71 அடி உய ரம் கொண்ட வைகை அணை யின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது.அணைக்கு நீர் வரத்து 14 கன அடி ஆகவும் அணையில் நீர் இருப்பு 2512 மி.கன அடியாகவும் உள் ளது.