தேனி, ஜூன் 4- மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல் போக சாகுபடிக்கு வைகை அணை யிலிருந்து தண்ணீர் திறப்பட்டதால் வைகை அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது . ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை யின் நீர்மட்டம் கடந்த வாரம் வரை 67 அடிவரை நீடித்தது. அப்போது சிவ கங்கை மாவட்ட பாசனத்திற்காக தொட ர்ந்து ஒரு வாரம் தண்ணீர் திறக்கப் பட்டது. அந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது தற்போது தேனி, திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப் பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது. சனிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 61.89 அடியாக உள்ளது. நீர்வரத்து இல்லாத நிலை யில் பாசனத்திற்கு 500 கன அடி மற்றும் மதுரை மாநகர குடிநீருக்கு 69 கன அடி என மொத்தம் 569 கனஅடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 3975 மி.கன அடியாக உள்ளது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 132.25 அடியாக உள்ளது. வரத்து 174 கனஅடி, பாசனத்திற்கு 200 கன அடி மற்றும் தேனி மாவட்ட குடி நீருக்காக 100 கன அடி என மொத்தம் 300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5224 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 39.70 அடி, வரத்து 58 கனஅடி, திறப்பு 42 கன அடி, இருப்பு 181.41 மி.கன அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 90.52 அடி, திறப்பு 3 கன அடி, இருப்பு 49.81 மி.கன அடி.