விருதுநகர், ஜூலை 20- பொதுத்துறை வங்கி களை விற்பதை எதிர்த்து நடைபெறும் வங்கி ஊழி யர்களின் நடைபயணக்குழு வியாழனன்று விருதுநகர் வந்தடைந்தது. பொதுத்துறை வங்கி களை தனியாரிடம் விற்கக் கூடாது என வலியுறுத்தி தமி ழகம் முழுவதும் நான்கு முனைகளிலிருந்து இந்திய வங்கி ஊழியர் சம்மேள னத்தினர் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த ஜூலை 19-ஆம் தேதி தூத்துக்குடியில் துவங்கிய பிரச்சாரம் வியா ழனன்று விருதுநகரை வந்தடைந்தது. பயணக்குழுவை எல்ஐசி ஊழியர் சங்க தலைவர் பவ ளவண்ணன், சிஐடியு மாவட்ட இணைச் செயலா ளர் ஆர்.பாலசுப்பிரமணி யன், மாவட்டத் துணைத் தலைவர் ஜி.வேலுச்சாமி, தட்சிண ரயில்வே எம்ப்ளா யீஸ் யூனியன் சார்பில் ஜெய ராமன், அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் உமாமகேஸ்வரி உட்பட ஏராளமானோர் வர வேற்றனர்.