விருதுநகர் மாவட்டம் மேல ராஜாகுலராமன் ஊராட்சி அய்யனாபுரம் கிராமத்தில் வாறுகால் வசதி வேண்டும். ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் சஞ்சீவி நாச்சியார், ஒன்றியச் செயலாளர் முனியாண்டி, சோமசுந்தரம், எம்.கே. பழனிச்சாமி, ஏ.காசிராஜன், பி.ஆறுமுகம் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.