districts

img

விருதுநகர்: தீப்பந்தம் ஏந்தி காங்கிரசார் போராட்டம்

விருதுநகர், ஏப்.6- காங்கிரஸ் கட்சி தலை வர் ராகுல்காந்தியின் எம்.பி.  பதவியை பறித்த ஒன்றிய  பாஜக அரசைக் கண்டித்து  விருதுநகர் அருகே எரிச்ச நத்தத்தில் காங்கிரஸ் கட்சி யினர் தீப்பந்தம், மெழுகு வர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு இளைஞர் காங்கிரஸ் முன்  னாள் தலைவர் எம்.மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். வட்டார தலைவர் முத்துமாரி முன்னிலையேற்றார்.  மாவட்  டத் தலைவர் ஸ்ரீ ராஜாசொக் கர், மாவட்ட செயற்குழு உறுப்  பினர் சீனிவாசன், சிவஞான புரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்டத் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் பேசுகை யில், ‘ராகுல் காந்தி மீது பொய்  யான வழக்கை போட்டு, 2  ஆண்டுகள் தண்டனை கொடுத்து எம்.பி பதவியை  தகுதி நீக்கம் செய்துள்ள னர். இது போன்ற தரக்குறை வான அரசியல் உலகில்  வேறு எங்கும் நடந்தது கிடை யாது. ஆர்எஸ்எஸ், பிஜேபி யும் மதவாத பிரச்சனையை உருவாக்கி மக்களை பிளவு படுத்தி குளிர் காய்ந்து வரு கின்றனர். எனவே, இந்திய  மக்கள் ஏமாந்து விடக்  கூடாது’ என வெளிநாடுகளில் உள்ள பத்திரிகைகளில் செய்தி வருகிறது. மேலும், அமித்ஷா, மோடி ஆகி யோர்   திட்டம் போட்டு நாட் டைக் கொள்ளையடிக்கும் செயலில் ஈடுபட்டு வரு கின்றனர் என தெரிவித்தார். மேலும் இதில், நகரத்  தலைவர் டி.ஜி. நாகேந்தி ரன், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர்  பால கிருஷ்ணசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.