மதுரை, ஏப்.1- திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மது ரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் திங்களன்று காலை வில்லாபுரம் பகுதியில் தனது பிரச்சாரத்தை துவங்கினார்.
பிரச்சாரத்தில் வேட்பாளர் சு.வெங்கடேசன் பேசுகையில், ‘‘மதுரையில் ஞாயிறன்று பிரச் சாரத்தை மேற்கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நாடாளு மன்ற வேட்பாளர் தருமியை போல் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருக்கின்றார்; அவரையா மீண்டும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்க போகின்றீர்கள்? என்று கூறியுள்ளார்.
வானதி சீனிவாசன் அவர்களே, ‘‘தருமியின் பக்கம் தான் இறைவன் நின்றார்’’ என்பது மதுரையின் வரலாறு. அதிகாரத்தில் இருப்பவர்கள், தான் வைத்ததுதான் சட்டம் என்று பேசுகிறார்கள். அப்படி தாங்கள் வைத்தது தான் சட்டம் என்று பேசினால், அந்த அதி காரத்திற்கு எதிரானதாக தருமி யின் குரல் இறைவனின் குர லாக எதிரொலித்ததுதான் மதுரை மண்.
எனவே அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் இடத்தை மதுரை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. எனவே இது மதுரையின் குரல்; தமிழகத்தின் குரல்; தாய்த் தமிழின் குரல்’’ என்று கூறினார்.