திருப்பரங்குன்றம், ஜூன் 19- மதுரை-திருப்பரங் குன்றம் சாலையில், அழ கப்பன் நகர் சந்திப்பு அருகே, மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் பைப் லைன் பணியால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். இந்த நிலையில் இரவு நேரத்தில் பணியாற்றி விரைவாக முடிக்க மாநக ராட்சி ஆணையர் கே.ஜே.பிர வீன்குமார் ஒப்பந்ததார ருக்கு உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து மிகுந்த திருப்பரங்குன்றம் சாலை யில் அழகப்பன் நகர் நுழையு மிடத்தில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரே பைப் லைன் பணி நடைபெறுகிறது. இத னால் கடந்த ஒரு மாதமாக அழகப்பா நகர் ரயில்வே கேட்-பைகாரா வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. பல சமயங்களில், 500 மீட்டர் தூரத்தை கடக்க ஆம்புலன்ஸ்கள் கூட சிர மப்படுகின்றன. இந்தத் தரு ணங்களில் போக்குவரத்து காவல்துறையினர் செய்வ தறியாது திகைத்து வரு கின்றனர். இந்த நிலையில் மாநக ராட்சி ஆணையர் மாநக ராட்சியின் வருவாய் மற்றும் பொறியியல் பிரிவுகளின் உயரதிகாரிகளுடன் சனிக் கிழமை நள்ளிரவு வருகை தந்து நிலைமையை ஆய்வு செய்தார். இதையடுத்து பணிகள் விரைவுபடுத்தப் படும் என்ற நம்பிக்கை ஏற் பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.