வேடசந்தூர், அக்.5- வேடசந்தூர் அருகே கிரா மத்திற்கு பாதை வசதியின்றி கிராம மக்கள் பரிதவித்து வருகிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர் அருகே உள்ள வே.புதுக் கோட்டை ஊராட்சி தோப்புபட்டி யைச் சேர்ந்த பெருமாள்கவுடர் என் பவர் ஊருக்கு மேற்கு பகுதியில் இருந்த கரடு முரடான இடத்தை சீர மைத்து விவசாயம் செய்ததால் இதை பார்த்த ஆங்கிலேயர்கள் செப்பு பட்டயம் வழங்கி நிலத்தை இலவமாக வழங்கினர். நிலத்தை சீர் செய்து விவசாயம் செய்து வந் தார். பிற்காலத்தில் பெருமாள்கவு டர் வாரிசுகள் ரூ. 2 ஆயிரம் ஊரில் உள்ளவர்களிடம் கடன் வாங்கிய தால் அந்த நிலத்தை சிறு சிறு பகுதி யாக அந்த பகுதியில் உள்ளவர் களுக்கு விற்று அதில் கிடைத்த பணத்தை கொண்டு கடனை செலுத்தி நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். வாங்கிய நிலத்தை விவசா யம் செய்து பலர் அங்கு குடியேறி னார்கள். அந்த பகுதிக்கு கேத்தம் பட்டி என்று பெயர் சூட்டினர். தற் போது 30க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகிறார் கள். அந்த காலத்தில் ஊருக்கு செல்லும் வழியில் உள்ள நிலத்தை வாங்கியவர் ஊர் மக்கள் சென்று வர, வண்டிப்பாதைக்கு அனுமதி கொடுத்தால் அந்த வழியாக கிராம மக்கள் சென்று வந்தனர். தற்போது அந்த நிலத்திற்கு சொந்தக்காரர், வண்டிப்பாதை எங் களுக்கு சொந்தமானது என்று அடிக்கடி வண்டிப்பாதையை முட் கள் கொண்டு அடைத்துவிடுகிறார். பொதுமக்கள் இதை கண்டித்து போராட்டம் என்று அறிவித்தவுடன் வருவாய்த்துறையினர் விரைந்து வந்து அடைத்துள்ள முட்பாதை யை எடுத்து விடுவார்கள். ஆனால் இந்த பாதை பிரச்சனை யை நிரந்திரமாக தீர்க்க எந்த நட வடிக்கையும் வருவாய்த்துறை யினர் எடுக்க முன்வருவதில்லை. முட்புதர்களுடன் மேடு பள்ளமு மாக ஒருவர் மட்டும் நடந்து செல் லும் வகையில் பாதை உள்ளதால் இந்த கிராமத்திற்கு அவசரத்துக்கு கூட ஆம்புலன்சு வர முடியாத நிலை யில் தவித்து வருகிறார்கள். இக்கிராம மக்கள் ஒத்தையடி பாதையில் 5 கிலோ மீட்டர் தூரம் வே.புதுக்கோட்டைக்கு நடந்து சென்று ரேசன் கடைகளில் பொருட் கள் வாங்கி வருகிறார்கள்.
மாணவர்களின் கல்வி பாதிப்பு
பாதை வசதி இல்லாததால் தங்களின் குழந்தைகளை 5 ஆம் வகுப்பு வரை அருகே உள்ள தோப்புப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு அனுப்பு கின்றனர். அங்கு படிப்பை படித்த வுடன் மேற்படிப்புக்கு அனுப்பாமல் தனியார் நூட்பாலை மற்றும் விவ சாயப்பணிக்கு அனுப்பிவிடு கிறார்கள். இந்த ஊர் மக்களுக்கு உயர் கல்வி என்பது எட்டாக்கனி யாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம் தலையிடுக: சிபிஎம்
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் பெரியசாமி கூறுகையில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சிறு மலையின் விளையும் காய்கனி களை மாவட்ட எல்லையான கல்வார்பட்டி ரெங்கமலையில் தங்கியுள்ள ஆங்கில படை வீரர்களுக்கு கொண்டு செல்வதற் கான வண்டிப்பாதை எங்கள் ஊரான கேத்தம்பட்டி வழியாக சென்ற தாக முன்னோர்கள் கூறினர். ஆனால் கேத்தம்பட்டி மக்கள் ஊரைவிட்டு வெளியேற வேண்டும் என்றால் ஒத்தையடி பாதையில் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. தனியார் இந்த பாதை எங்க ளுக்கு சொந்தமான இடம் என்று கூறி பாதையில் யாரும் நடக்கக் கூடாது என்று தடுத்து விடுகிறார் கள். மக்களை திரட்டி வேட சந்தூர் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு போராட்டங்கள் நடத்தி னோம். வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து கேத்தம்பட்டிக்கு செல்லும் பாதை யை யாரும் அடைக்க கூடாது என்றும், சேதமடைந்துள்ள மண் சாலையை சம்பந்தப்பட்ட நிலத் திற்கு சொந்தக்காரர் சீரமைக்க வேண்டும் என்று கூறி சமரசம் செய் கிறார்கள். பிறகு கேத்தம்பட்டி பாதை பிரச்சனையை வருவாய்த்துறை யினர் ஏனோ கண்டுகொள்வதில்லை. திண்டுக்கல் மாவட்ட நிர்வா கம் உடன் தலையிட்டு கேத்தம் பட்டிக்கு செல்லும் பாதையை தார்ச் சாலையாக மாற்றி மக்களின் நிரந் தர பிரச்சனையை தீர்க்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தினார்.