புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஒய்வூதியர்கள் சங்கத்தினர் சிவகங்கையில்தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் வடிவேலு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முத்துசாமி, கிருஷ்ணகுமார், மாதவன், அரியமுத்து, கண்ணுச்சாமி, சங்கரநாராயணன், செல்லமுத்து, மாவட்டப் பொருளாளர் பவுன்தாய் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.