districts

img

தனியார் வசம் சென்ற முதல் நாளிலே வைகை அணையில் 3 டன் மீன்கள் பிடிபட்டன

தேனி, ஏப்.13-  ஆண்டிப்பட்டி அருகே 1958ம் ஆண்டு கட்டப்பட்ட வைகை அணையில் கடந்த மாதம் வரையில் அரசே நேரடியாக மீன்பிடியை நடத்தி வந்தது. வைகை அணை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மீனவர்களை கொண்டு மீன்வளத்துறை மூலம் மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தன. பிடிபடும் மீன்கள் பங்கு அடிப்ப டையில், பாதி மீனவர்களுக்கும், மற்றொரு பாதி அர சுக்கும் பிரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு கிலோ ரூ.130க்கு  விற்பனை செய்யப்பட்டது. வைகை அணையில் பிடிக் கப்படும் ஜிலேபி ரக மீன்களுக்கு பொதுமக்கள் மற்றும்  வியாபாரிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். கடந்த மாதம் வரையில் ஒருநாளைக்கு சராசரியாக 500கிலோ மீன்கள் பிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வைகை அணையின் மீன்பிடி உரிமையை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்து, அதற்கான ஏலம் கடந்த மாதம் சென்னையில்நடைபெற்றது. கோவையை சேர்ந்த  ஒருநபர் ரூ.82 லட்சத்துக்கு வைகை அணை மீன்பிடி உரிமையை பெற்றார். அதன்பின்னர் நிர்வாக நடை முறை காரணமாக கடந்த ஒருமாதமாக வைகை அணை யில் மீன்பிடி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலை யில் தனியார் வசம் சென்ற வைகை அணையில் ஏப்ரல்  13 அன்று காலை மீன்பிடி தொடங்கப்பட்டது. முதல்நாளி லேயே 3 டன்களுக்கு அதிகமான மீன்கள் பிடிக்கப்பட்டது.  குறிப்பாக 11 கிலோ எடையுள்ள ஒரு கட்லா மீனும் பிடிக்  கப்பட்டது.  அரசு நடத்திய போது இதுபோல மீன்கள் அதி களவில் மீன்கள் பிடிக்கப்படாத நிலையில் தனியார் வசம்  சென்றதும் அதிகளவில் மீன்கள் பிடிக்கப்பட்டது எப்படி?  என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். தனி யார் வசம் சென்ற முதல்நாளிலேயே 3 டன் மீன்கள் பிடிக்கப்பட்டது அதிகாரிகளையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.