மதுரை, ஆக.25- காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க 68 ஆவது மதுரை கோட்ட பொது மாநாடு மற்றும் பேரணி ஞாயிறன்று மதுரை கோட்டத் தலைவர் என்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது
மதுரை அண்ணா நகர் சினிப்ரியா மினிப்ரியா தியேட்டர் எதிரில் உள்ள அஞ்சலி மகாலில் நடை பெற்ற பொது மாநாட்டிற்கு வரவேற்புக் குழு தலைவரும் தெற்கு சட்டமன்ற உறுப்பினரு மான மு.பூமிநாதன் வரவேற்று பேசினார். அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொரு ளாளர் பி.எஸ்.ரவி, தென்மண்டல காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க துணைத் தலைவர் சி. முத்துக்குமாரசாமி ஆகியோர் சிறப்புரை யாற்றினர்.
நெல்லை பொதுச் செயலாளர் என்.பொன்னையா, சிஐடியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின், அகில காப்பீட்டுக் கழக பென்ஷ னர் சங்க பொதுச் செயலாளர் என்.சேகர் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். தேசிய களப் பணியாளர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் பி.ராஜாராம், தென்மண்டல பொது இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க துணைத்தலைவர் எம்.புஷ்பராஜன் மற்றும் சகோதர தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினார்.
முன்னதாக “வலுவான எல்ஐசி வளமான இந்தியா” என்ற முழக்கத்துடன் எல்ஐசி ஊழி யர்களின் பேரணியை அம்பிகா தியேட்டர் அருகில் இருந்து எல்ஐசி பென்ஷனர் அகில இந்திய இணைச் செயலாளர் சந்திரசேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கொடியை கோட்டத் தலைவர் என்.சுரேஷ்குமார் ஏற்றிவைத்தார். மாநாட்டில் தென்மண்டல முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவாமி நாதன், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மதுரை மாநகர் மாவட்டச் செய லாளர் மா.கணேசன், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க அகில இந்திய இணைச் செயலாளர் எம்.கிரிஜா மற்றும் முன்னாள் கோட்டத் தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோட்ட பொதுச் செயலாளர் என்.பி.ரமேஷ் கண்ணன் நன்றி கூறினார்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
விடுதலை இந்தியாவில் உச்சத்தில் இருக் கும் வேலையில்லாத் திண்டாட்டம் கவலை யளிக்கும் ஒன்றாக உள்ளது. புதிய தாராள மய கொள்கைகள், ஜிஎஸ்டி அமலாக்க மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவை இன்னும் நிலை மையை மோசமாக்கியுள்ளது. இந்தியாவில் வேலையில்லா இளைஞர்கள் 83 சதவீதம் பேர் என்று அறிக்கைகள் கூறுகின்றன. இதில் 2000 ஆவது ஆண்டிம் 35.2 சதமாக உயர்ந்தது. படித்த இளைஞர்கள் மத்தியில் 2022 ஆம் ஆண்டு 65.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தீவிரத்தை உணர்ந்து பொதுத்துறை நிறுவனங்களில் பல லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளன. ரயில்வேயில் 2.74,580 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளன. எல்ஐசி மூன்றாம், நான்காம் பிரிவு ஊழியர் பணியிடங்கள் ஆயிரக்கணக் கில் நிரப்பப்படாமல் உள்ளன. வேலையின் மையை போக்க உறுதியான நடவடிக்கையை ஒன்றிய அரசு எடுக்க வேண்டும்.
எல்ஐசி (திருத்த) சட்டம் மூலம் கூட்டுப் பேர உரிமையை ஒன்றிய அரசாங்கம் பறித்துள்ளது. எனவே தொழிலாளர்கள் பயன்பெறும் வகை யில் கூட்டுப் பேர உரிமையை மீட்டெடுக்க வேண்டும். எல்ஐசியில் ஊழியர்களை இரண்டாக பிரிக்கும் புதிய பென்சன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் மனிதாபி மானமற்ற தாக்குதலை கைவிட வேண்டும். இறையாண்மையை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரிமியம் வருவாய் உள்ளிட்ட வாச்சியில் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் நிறுவனங் கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கான பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்கிட வேண்டும்.
ஐஆர்டிஏஐ அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன்னால் எல்ஐசியின் மூலதனத்தை மாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை முன்வைத்தது. புதிதாக காப்பீட்டுத்துறைக்கு வருபவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் மூலதனத்தைக் குறைக்கும் அறிவிப்புகளை வெளியிடத் துவங்கியிருக்கிறது. நுகர்வோர் நலனை பாதிக்கும் புதிய கொள்கைகளை உருவாக்கு வது, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை திட்டமிட்டு வலுவிழக்கச் செய்வது போன்ற எதிர் மறை கொள்கைகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.
பெருகி வரும் பாலியல் வன்முறைகளைத் தடுத்திட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிக்க விரைவு நீதிமன்றம் அமைத்திட வேண்டும்.
தொழிலாளர் நலச் சட்டங்கள் திருத்தி அமைக்கப்பட்டதைக் திரும்பப் பெற வேண்டும். புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். கூட்டாட்சி தத்து வத்தை நிலைநாட்டவும், குறிப்பாக அனைத்து மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்திடக் கோரியும், தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்கு தலை கண்டித்தும், மீனவர்களின் வாழ்வாதா ரத்தை உறுதி செய்திடவும், நீட் தேர்வு முறை யில் இருந்து தமிழகத்திற்கு முழு விலக்கு அளித்திட வேண்டும்,
சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் களம் கண்டு வரும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் இயக்கங்களில் இணைந்து செயலாற்றிடவும், சமூகநீதியை நிலைநாட்டிட வும், சாதிய ஆணவ படுகொலைகளுக்கு எதி ராக சிறப்பு தனிச்சட்டம் இயற்றிட வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.