மதுரை, ஜூன்.5- மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மல்யுத்த கூட்டமைப்புத் தலை வரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்களைத் தாக்கிய காவல்துறையினர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஐக்கிய விவ சாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் திங்களன்று ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இராமநாத புரத்தில் அனைத்துத் தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மதுரை சமயநல்லூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவர் பி.நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மதுரை மாவட்டச் செயலாளர் எஸ்.பி.இளங்கோவன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.மலர்விழி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மேற்கு ஒன்றிய செயலாளர் பி.ஜீவானந்தம், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவர் எம்.சௌந்தர ராஜன், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன், நிர்வாகிகள் எம்.சௌந்தரராஜன், ஜி.கௌரி, மலை.கண்ணன், நல்.மூர்த்தி, பொன்ராஜ், எஸ்.எம். பாண்டி, மகாலட்சுமி, இந்திரா, விவசாயிகள் சங்க துணைத் தலை வர் அய்யாவு, சித்திராதேவி, ராதாகிருஷ்ணன், உட்படபலர் கலந்து கொண்டனர். தேனி பழைய பேருந்து நிலை யம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் அமைப்பின் ஒருங்கிணைப் பாளர் டி.கண்ணன் தலைமை வகித் தார். சிபிஐ விவசாயிகள் சங்க தலை வர் காசி விசுவநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி ராதிகா தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர்கள் வி.ராஜேந்திரன், மணிகண்டன், எஸ்.சஞ்சீவிகுமார், சுருளிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் ஐக்கிய விவ சாயிகள் முன்னணி சார்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என் பெரு மாள் தலைமை வகித்தார்
திண்டுக் கல் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் நிக்கோலஸ், தமிழக விவசாய சங்க மாவட்டசி செய லாளர் சூசை மாணிக்கம், அகில இந்திய விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சதீஷ்குமார், ஜெகதீஷ் குமார், மலைத் தோட்ட விவசாயி கள் சங்கத் தலைவர் தங்கவேல், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம். ராம சாமி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இராமநாதபுரம் மாவட்டம் பர மக்குடியில் ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி என்.கே. ராஜன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம் மாவட்டத் துணைச் செயலாளர் டி.ராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் வி.மயில்வாக னன், எம்.முத்துராமு, என்.ராம லட்சுமி, ஏஐடியுசி மாவட்ட நிர்வாகி என்.எஸ்.பெருமாள், ஆர். கருணா நிதி, எச்எம்எஸ் ஹாரிஸ், ஐஎன்டி யுசி குப்புசாமி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.