districts

img

அலங்காநல்லூர் அருகே கூம்பூர் குண்டு ஊரணியில் கார் மூழ்கி விபத்து: 2 பேர் பலி –மூவர் காயம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அச்சம்பட்டி முல்லைப் பெரியாறு ஆற்றில் மதுரை செல்லூரை சேர்ந்த நண்பர்கள் அரவிந்த். (27), சித்திக். (27), வேல்பாண்டியன். (27),வீரபாண்டி.(27), முத்துப்பாண்டி.(25). ஆகிய 5 நண்பர்கள் அச்சம்பட்டியில் உள்ள ஆற்றில் குளித்துவிட்டு காரில் வீட்டிற்கு சென்றபோது நிலைதடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த கூம்பூர் குண்டு ஊரணியில் கார் மூழ்கி விபத்துக்குள்ளானது.  

விரைந்து வந்த அலங்காநல்லூர் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் மூழ்கிய காரை ஜேசிபி இயந்திரம் மூலம் வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தில் காரில் இருந்த 5 பேரில்  அரவிந்த், சித்திக் ஆகிய இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். மற்ற 3  பேரும் காயங்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

;