திருச்சிராப்பள்ளி, நவ.6 - திருச்சி அப்போலோ சிறப்பு மருத்துவ மனை லேப்ராஸ்கோபிக் டாக்டர் முகமது மன்சூர், இஎன்டி மரு.அஜய்மாணிக்கம் ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வீட்டு கட்டுமானப் பணியில் இருந்த 33 வயது இளைஞர், 15 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில், 5 அடி நீள இரும்பு கம்பி அவரது கழுத்தின் பக்கவாட்டில் சொரு கிக் கொண்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்து வமனைக்கு கொண்டு வரப்பட்ட வாலிப ருக்கு மருத்துவர்கள் ஸ்டீபன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகியோர் உடனடியாக முதலு தவி சிகிச்சைகளை அளித்து, இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் கழுத்தில் பாய்ந்திருந்த இரும்பு கம்பியின் நீளம் இருபுறமும் குறைக் கப்பட்டது. அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோ தனையில், ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற் படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து எனது தலைமையில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் விதுன் ராஜ், ரத்தக் குழாய் அறுவை சிகிச்சை நிபுணர் ஆனந்த் ஆகியோரின் உதவியுடன், இஎன்டி நிபுணர் அஜய் மாணிக்கம் கண்காணிப் பில் நோயாளிக்கு டிரக்கியஸ்டமி செய்யப்பட் டது. நோயாளிக்கு மூச்சுவிடுவது சிரமமாக இருந்த நிலையில், மயக்க மருத்துவர்கள் கார்த்திக் மற்றும் அழகப்பன் ஆகியோர் சீரான சுவாச வசதியை ஏற்படுத்திக் கொடுத் தனர். உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்படா மல் இருப்பதற்காக மரு.முரளிரங்கன் எண்டோஸ்கோபி சிகிச்சையை மேற்கொண் டார். இதையடுத்து சில நாட்கள் ஐசியுவில் இருந்த நோயாளி, பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப் பட்டார்”. இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின் போது மருத்துவமனை நிர்வாகி மரு.சிவம், சீனியர் பொது மேலாளர் சாமுவேல், பொது மேலாளர் மணிகண்டன், சீனியர் மேலாளர் அனந்தராமகிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.