districts

img

மாதர் சங்க மூத்த தலைவர் தோழர் பாப்பா உமாநாத் நினைவஞ்சலி

மதுரை, டிச.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  மூத்த தலைவர் தோழர் பாப்பா உமாநாத்  அவர்களின் 12 ஆம் ஆண்டு  நினைவஞ்சலி பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.இதில் தோழர்  பாப்பா உமாநாத்  உருவப்  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.   மதுரை மாநகரில் ஜனநாயக மாதர்  சங்கம் சார்பில்  அரசரடி, மேலப்பொன்னக ரம், மீனாம்பாள்புரம், ஜெய்ஹிந்த்புரம், புதூர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை யன்று நடைபெற்றது இதில் மாநிலச் செய லாளர் ஆர். சசிகலா, மாவட்டச் செயலா ளர் -மாமன்ற  உறுப்பினர் வை. ஜென்னி யம்மாள் , மாவட்ட பொருளாளர் ஆ. லதா, மாவட்ட துணைச்செயலாளர் புவனேஸ்வரி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பானுமதி, பாரதி உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூ ராட்சி வெள்ளக்குட்டு பகுதியில் மாதர் சங்கம் சார்பில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நத்தம் தாலுகாதலைவர் பி.டி.ஆர்.லீலா, பொருளாளர் லில்லிபுஸ்பம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.