districts

img

சின்னாளபட்டியில் மழையால் மரங்கள் சாய்ந்தன

சின்னாளபட்டி, ஜூலை 30-  கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலை யில் சனிக்கிழமையன்று மாலை திடீரென திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் பலத்தக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் சின்னாளப்பட்டி பேருந்து நிலையம் செல்  லும் சாலையில் உள்ள வேப்பமரம் வேரோடு சாய்ந்தது.  பொதுமக்கள் பேருராட்சி நிர்வாகத்திடம் தகவல் கொடுத்  ததின் பேரில் பேருராட்சி தலைவர் பிரதீபா கனகராஜ், துணைத் தலைவர் ஆனந்தி பாரதிராஜா,  துப்புரவு ஆய்வா ளர் கணேசன் மற்றும் கவுன்சிலர்கள், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் உதவியுடன் மரத்தை அப்புறப் படுத்தினர்.