திருவில்லிபுத்தூர்,ஜன.13- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரியமிக்க உயர்தர உள்ளூர் நெல் ரகங்கள் மேம் பாட்டு கருத்தரங்கம் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்டராமன் தலைமை வகித்தார். வேளாண்மை துறை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) சுமதி, விதை ஆய்வு துறை இயக்குனர் வனஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இங்கு வேளாண்மை துறை சார்பில் பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் பாரம் பரிய வேளாண் கருவிகள், தோட்டக்கலை, பொறியியல் துறை சார்பில் துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் மானிய விவரங்கள் இயந்திரங்கள், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், பருத்தி ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்ட ரகங்கள் குறித்த கண்காட்சி இடம்பெற்றது. கண்காட்சியை துவக்கி வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார் பேசுகையில், விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு பதிலாக மதிப்பு கூட்டப் பட்ட பொருளாக விற்பனை செய்யும் போது அதிக லாபம் பெறலாம். நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து விற்பனை செய்தால் விவசாயிகள் அதிக லாபம் பெறலாம். கொப்பரை தேங்காய் கொள்முதல் நிலையத்தை அதிகப்படுத்த வேண்டும் என அதிகாரியிடம் கோரிக்கை வைத்தார். நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மல்லி கு.ஆறுமுகம், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வசந்திமான்ராஜ், விதை சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்கு னர் சுப்பாராஜ்,விருதுநகர் விற்பனை குழு செயலாளர் வேலுச்சாமி, தோட்ட கலைத் துறை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் பாரம்பரிய இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை துணை இயக்குனர் வளர்மதி நன்றி கூறினார்.