districts

img

விழிப்புணர்வு முகாம்

திருவில்லிபுத்தூர், ஜூலை 7- திருவில்லிபுத்தூர் நகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு’ மற்றும் ’நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்’ சார்பில் திரு. வி .கல்யாண சுந்தரனார் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் நல அலுவலர் மருத்துவர் கவிப்பிரியா,  சுகாதார ஆய்வாளர் சந்திரா ஆகியோர் கருத்துரை யாற்றினர். சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் ,பள்ளி மாணவர்கள் ,ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.