districts

img

சாலை பாதுகாப்பு வார விழா

திருவில்லிபுத்தூர் ,ஜன.17- திருவில்லிபுத்தூர் வட்டார போக்குவரத்து அலு வலகம் சார்பாக  சாலைப் பாதுகாப்பு வார விழா நடை பெற்றது. ஜனவரி 17 அன்று  திருவில்லிபுத்தூர் வட்டா ரப் போக்குவரத்துத்துறை சார்பாக திருவில்லிபுத்தூர் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகபணிமனையில் வைத்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.  வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இளங்கோ வன், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் கிரேடு 1 பூர்ணலதா  ஆகியோர்  இலவச கண் சிகிச்சை முகாமை  துவக்கி வைத்தனர்.  இந்த விழாவில் ஸ்ரீ கோகுலம் அறக்கட்டளை யின் செயல் அலுவலரும், சக்தி சரவணா ஓட்டுநர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்கு னருமான எஸ்.முத்துவேல் அவர்கள் தலைமையில்  ஓட்டுனர், நடத்துனர்கள் சாலை பாதுகாப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.