நாகர்கோவில், பிப்.19- கன்னியாகுமரி திரு வள்ளுவர் சிலை முதல் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் வரை சுற்றுலா பயணிகள் நடந்து செல்வதற்கு ஏதுவாக அமை க்கப்பட்டுள்ள கண்ணாடி இழை தரைத்தள பாலத்தி னை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற் கொண்டார். ஒன்றரை மாதத்தில் மூன்றரை லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவித்தார். குமரி மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமை யில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு செயலாளர் செல்வ ராஜ், நாகர்கோவில் மாநக ராட்சி மேயர் ரெ.மகேஷ் ஆகியோர் முன்னிலையில் பிப்ரவரி 18 செவ்வாயன்று பார்வையிட்ட பின்னர் செய்தி யாளர்களிடம் அமைச்சர் பேசுகையில், கடல்சார் நடைபாதை பாலத்தின் நீளம் 77 மீட்டர் மற்றும் அகலம் 10மீட்டர் ஆகும். மேலும் கடல் அரிப்பு கடல் காற்றின் வேகம் போ ன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டு கொண்டு தான் பாலம் வடிவமைக்கப் பட்டுள்ளது. சுனாமி காலத் தில் அலைகளின் உயரம் கணக்கீட்டு தான் பாலம் கட்டப்பட்டுள்ளது. உறுதித் தன்மையினை பொறுத்த வரை 180 கிலோமீட்டர் வேகத் தில் காற்று அடித்தாலும் தாங்க கூடியவகையில் தான் பாலம் கட்டப்பட்டுள்ளது. கண்ணாடி இழை தரைத்தள பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைகிறார்கள். ஜனவரி மாதத்தில் மட்டும் இரண்டு லட்சத்து பதி னாயிரம் சுற்றுலா பயணிக ளும், பிப்ரவரி 1 முதல் பிப்ர வரி 17ம் தேதி வரை மட்டும் 1 இலட்சத்தி இருபத்தி நாலாயிரம் சுற்றுலா பயணி கள் என மொத்தம் 3.50 இலட்சம் சுற்றுலா பயணிகள் இதுவரை பார்வையிட்டுள்ள னர். இன்றைய ஆய்வின் நோக்கம் கண்ணாடி பாலத் தில் சிறு சிறு பணிகளை பார்வையிட்டு, மீண்டும் பாலத்தின் உறுதித்தன்மை யினை ஆராய சென்னை ஐஐடி-யை சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் செயலாளர் தலைமையில் வருகை புரிந்துள்ளார்கள். ஆய்வில் சிறப்பு அலு வலர் திட்டம் சந்திர சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின், கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண் டார்கள்.