பேருந்துக்கு காத்திருந்தவர்கள் பேருந்து மோதி பலி
இராமநாதபுரம், ஆக.14- பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இருவர் பலியாயினர். தூத்துக்குடியில் இருந்து சென்னை செல்லும் அரசுப் பேருந்து போது திங்கள் பிற்பகல் 1.30 மணியளவில் இராம நாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் கல்லூரி வந்தபோது சாலையின் எதிரே தூத்துக்குடிக்கு மீன் ஏற்றிக்கொண்டு வாகனம் சென்றுள்ளது. மீன் ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் மற்றொரு வாகனத்தை முந்திச்செல்ல முயற்சித்த போது அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து நிலையத்தை உடைத்துக்கொண்டும் அருகே இருந்த கல்லூரியின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண் டும் கல்லூரிக்குள் இருந்த மரத்தில் மோதி விபத்துக் குள்ளானது. இந்த விபத்தில் கல்லூரி அருகே உள்ள பேருந்து நிலை யத்தில் பேருந்துக்காகக் இரு பெண்கள் சம்பவ இடத்திலே யே பலியாயினர். மேலும், இருவர் படுகாயமடைந்தனர்.
பயிற்சி முகாம்
மதுரை, ஆக.14- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பெண் கட்சி உறுப்பி னர்களுக்கான அரசியல் பயிற்சி முகாம் திருப்பரங்குன்றம் கே.பி.ஜானகியம்மாள் அரங்கில் திங்களன்று நடை பெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் என்.விஜயா வரவேற்றார். தலைமை வகித்தார். “கம்யூனிஸ்ட் இயக்கமும் பெண்க ளும்” என்ற தலைப்பில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.மகா லெட்சுமி, “சமூகமும் பெண்களும்” என்ற தலைப்பில் மாநி லக்குழு உறுப்பினர் பி.சுகந்தி, “கட்சியைக் கட்டுதல்” என்ற தலைப்பில் எஸ்.கே.பொன்னுதாய் ஆகியோர் கருத்துரை யாற்றினர். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் செ.முத்து ராணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பிரேமலதா, க.பிருந்தா, சி.மலர்விழி உட்பட ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர்.
நகை பறிப்பு வழக்கில் இளைஞர் கைது
திருவில்லிபுத்தூர், ஆக.14- திருவில்லிபுத்தூரில் வீடுபுகுந்து பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் சிவகங்கையைச் சோ்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனா். திருவில்லிபுத்தூா்-திருவண்ணாமலை சாலையில் உள்ள தாமரை நகரைச் சோ்ந்தவா் மகேந்திரன் (53). இவரது மனைவி கணேஸ்வரி (46).இவா்கள் இருவரும் கடந்த மாதம் 15-ஆம் தேதி இரவு வீட்டிலிருந்தபோது, முகமூடி அணிந்து வந்த இருவா் கத்தியைக் காட்டி மிரட்டி கணேஷ்வரி அணிந்திருந்த ஆறரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து திருவில்லிபுத்தூா் குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நகை பறித்த இருவரையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற மதுரை மாவட்டம், பாலமேடு பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (20) என்பவரைக் கைது செய்தனா். அவரிடம் விசாரித்ததில் நகை பறிப்பில் ஈடுபட்டவா் கள் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ்குமாா் (எ) கா்லா ரமேஷ் (22), மதுரை மாவட்டம், செக்கானூரணி யைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் மது ஆகியோா் என தெரியவந்தது. இவா்களில் ரமேஷ்குமாா் வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு, திருப்பூா் மாவட்டச் சிறை யில் அடைக்கப்பட்டிருந்தாா். அவரை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரித்தனா். அதனடிப்படையில், அவரி டமிருந்து ஆறரை பவுன் தங்கச் சங்கிலி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா். மது என்பவரைத் தேடி வருகின்றனா்.
தேனி வளர்ப்புப் பயிற்சி
இராஜபாளையம், ஆக.14- விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத் துறையினர் விவ சாயிகளுக்குத் தேனி வளர்ப்பு குறித்துப் பயிற்சிய ளித்தனர். விருதுநகர் மாவட்ட தோட்டக்கலைத் துறையினர் அனைத்து வட்டாரங்களிலும் தேனீ வளர்க்கும் விவசாயி களைத் தமிழ்நாடு வேளாண்மை (மதுரை) பல்கலைக் கழகத்திற்கு அழைத்துச் சென்றனர் அவர்களுக்குப் பேரா சிரியர் சுரேஷ், “தேனீக்கள் வளர்ப்பது, தேன் எடுப்பது தேன் விற்பனை செய்வது குறித்து விவரித்தார். இந்த பயிற்சிக் ்கான ஏற்பாடுகளைத் தோட்டக்கலை உதவி இயக்கு நர்கள் ராஜசேகர், கார்த்திக், தோட்டக்கலை அலுவலர் கண்ணன், ஆயிஷா, சுஷ்மிதா, வட்டார உதவி தோட்டக் கலை அலுவலர்கள் விஜயகுமார் பாலமுருகன் கார்த்திக் சிவா தேசிங்கு ராஜா பூவரசன் ஆகியோர் செய்திருந்தனர்.
கம்பத்தில் வீட்டை உடைத்து திருட்டு
தேனி, ஆக.14- கம்பத்தில் பூட்டிய வீட்டை உடைத்து நகை திருடிய நபரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். கம்பம் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்த காளி யப்பன் மகன் ராஜாமணி .இவரது மகன் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுத்த வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்று விட்டார். நிலை சாவியை எடுத்துக் கொண்டு முன் கதவின் சாவியை அருகில் உள்ள நிவேதா என்பவரிடம் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார் . சிறிது நேரத்தில் நிவேதா வீடு உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜாமணி வீட்டிற்கு வந்து பார்த்த போது பீரோவிலிருந்த ஐந்தரை பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இது குறித்து கம்பம் வடக்கு காவல் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் இளையராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
18 தீர்மானம் நிறைவேற்றிய வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம்
திருவில்லிபுத்தூர், ஆக.14- வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் தலைவர் சிந்து முருகன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் லலிதா ஆணையாளர் (கிராம ஊராட்சிகள்) சத்திய சங்கர் மேலாளர் துணைத் தலை வர் ரேகா மற்றும் மன்ற உறுப்பினர்கள் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் நிறைவேறியது.
அயன்பாப்பாகுடி பெரிய கண்மாயில் கழிவு நீர்: தடுக்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு
மதுரை, ஆக.14- குடியிருப்புப் பகுதியின் அருகே அயன் பாப்பாகுடி பெரியகண்மாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க வேண்டும் என மதுரை அவனியாபுரம் -அயன்பாப்பகுடி மக்கள் மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனுவில், “அயன்பாப்பாகுடி கண் மாய்க்கு பழங்காநத்தம் முத்துப்பட்டி ஜெய்ஹிந்துபுரம், எம்.கே.புரம்: சுப்பிர மணியபுரம், டி.வி.எஸ்.நகர், கோவலன் நகர் ஆகிய பகுதிகளிலிருந்து கழிவு நீர் வரு கிறது திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயின் உபரி நீரும் அயன்பாப்பாகுடி பெரிய கண்மாயைச் சென்று அடை கிறது. தற்போது அயன்பாப்பாகுடி பெரிய கண்மாய் மூலம் விவசாயம் நடைபெற வில்லை. பெரிய கண்மாயின் மேட்டுமடை பள்ளமடை இரண்டு மடைகளும் பூட்டப் பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வெளி யேற முடியாத நிலை உள்ளது. கண்மாய்க் கரைகள் பாதுகாப்பு இல்லாமல் உடையும் தருவாயில் உள்ளது. மேலும் இந்த கண்மாய்க்கரையின் அருகில் இரண்டு அரசுப் பள்ளிகளும் உள்ளன. இந்தக் கால்வாயின் கழிவு நீரை வெளி யேற்ற அவனியாபுரம் கிராமத்தில் கருவல டித் தொண்டு வாய்க்கால் இருந்தது. கால்வா யில் வரும் உபரி கழிவு நீர் இந்த கருவலடித் தொண்டு வாய்க்கால் வழியாகப் புதுக்குளம், ஈச்சனேரி, கரிசல்குளம், கழுவன்குளம் போன்ற கண்மாய்களுக்குப் போய்ச் சேரும். இந்த கால்வாயும் அடைக் கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் பகுதி யில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. இந்தக் கால்வாயிலிருந்து தண்ணீர் வெளியேற ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஓமனில் சித்ரவதையை அனுபவிக்கும் பெண்கள் மீட்டுத்தரக்கோரி மதுரை ஆட்சியரிடம் மனு
மதுரை, ஆக.14- வெளிநாட்டில் பணிக்குச் சென்று அங்கு சித்திர வதைகளை அனுபவித்து வரும் தாயை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. மதுரை ஆனையூர் இ.பி. காலனி சாய் நிவாஸ், ராஜாஜி சாலையைச் சேர்ந்த செல்வ லட்சுமி என்ற மாணவி வெளிநாட்டில் பணிக்காகச் சென்ற அவரது தாய் மற்றும் பத்துக்கு மேற்பட்ட பெண்களை மீட்டுத் தரக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தார். மனுவில், “கடந்த 15 நாட்களுக்கு முன்னர் எனது தாய் சிவகங்கையைச் சேர்ந்த முகவர் ஒருவர் மூலம் வெளிநாட்டில் அலு வலக வேலை இருப்பதா கவும் மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை சம்பளம் தருவதாகக் கூறி டூரிஸ்ட் விசாவில் ஓமன் நாட்டிற்கு அழைத்துச் சென் றார். அங்கு சென்ற பிறகு எனது தாயாரை தவறான வழியில் பயன்படுத்தும் நோக்கத்தில் ரூ. 1,50,000 விற்று விட்டார்கள் என்ற தகவலை எனது தாயார் தெரிவித்தார். அனைவரை யும் உணவில்லாமல் ஒரு அறையில் அடைத்து வைத் துள்ளார்கள். என் தாயாரு டன் பத்துக்கும் மேற்பட்ட பெண்களை அறையில் அடைத்து வைத்து சித்திர வதை செய்கிறார்கள் அது சம்பந்தமான வீடியோ மற்றும் ஆடியோக்களை எனது தாயார் அனுப்பி யுள்ளார். எங்களுக்காக வாழ்வா தாரமாக என் தாயார் மட்டுமே இருக்கிறார். அவர் களை பணிக்கு என்று அழை த்து சென்று அடைத்து வைத்து சித்திரவதை செய்கி றார்கள் என் படிப்புடம் எனது சகோதரியின் படிப்பும் கேள்விக்குறியாக உள்ளது. என் தாயை மீட்பதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
ஆடு மீட்பு
திருவில்லிபுத்தூர், ஆக.14- படியில்லாத கிணற்றில் விழுந்த ஆடு மீட்கப்பட்டது. திருவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு சாலையில் ஆட்டு வளசல் என்ற இடத்தில் சண்முகசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் அவருடைய ஆடு படியில்லாத கிணற்றில் விழுந்து விட்டதாக திருவில்லி புத்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கிடைத்தது இதைத் தொடர்ந்து நிலைய அலுவலர் முத்துச்செல்வம் தலைமையிலான குழுவினர் உயி ருக்குப் போராடிக்கொண்டிருந்த ஆட்டை பத்திரமாக மீட்ட னர் பின்னர் ஆடு உரிமையாளர் வசம் ஒப்படைக்கப்பட்டது.
சல்பேட் கலந்த பால் குடித்த குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சை
நத்தம், ஆக.14- சல்பேட் கலந்த பாலைக் குடித்த குழந்தைகளுக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா-ராபிக் தம்பதியினர். இவர்க ளுக்கு இனாமல் ஸசன் (4) மற்றும் 10 மாத கைக் குழந்தை பாத்திமா ஆகியோர் உள்ளனர். இவர்களது உற வினர் நத்தம் அம்மாபட்டியைச் சேர்ந்தவர் புரோஸ்கான் இவரது குழந்தைகள் முஹமது சுகைல் (11), முஹமது சுனைல் (4). விடுமுறை என்பதால் புரோஸ்கானின் குழந்தை கள் ஷேக் அப்துல்லா வீட்டிற்கு வந்துள்ளனர். குழந்தைக ளுக்கு ராபிக் பால் கலந்து கொடுத்துள்ளார். அதைக் குடித்த நான்கு குழந்தைகளுக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாலை ஆய்வுக்கு உட்படுத்திய போது பாலில் சர்க்கரைக்குப் பதிலாக மெக்சீனியம் சல்பேட் என்ற வேதிப்பொருள் கலந்து கொடுத்தது தெரிய வந்தது. நான்கு குழந்தைகளும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திமுக வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம்
இராமநாதபுரம், ஆக.14- இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வாக்குச் சாவடி முகவா்கள் (பூத் கமிட்டி) கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமை வகித்தாா். இதில் பிற்படுத்தப்பட்டோா், கதா் கிராம வாரியத் துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசினாா். வருகிற 17-ஆம் தேதி, இராமநாதபுரத்தில் தென்மாவட்ட அளவில் நடைபெறும் வாக்குச் சாவடி முகவா்கள் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வ ருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளாா். அதனால் இந்தக் கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி முகவா்களும் கலந்து கொள்ள வேண்டும் என அமைச்சா் கேட்டுக்கொண்டாா்.
‘அதானி பணத்துடன் அண்ணாமலை யாத்திரை’
சிவகாசி, ஆக.14- இந்தியாவில் பாஜ ஆட்சிக்கு வந்த காலம் முதல் பட்டாசுத் தொழிலை ஜி.எஸ்.டி, சுற்றுச் சூழல் மாசு, விற்க, வெடிக்கத் தடை எனத் தொடர்ந்து அத் தொழிலைச் சீர்குலைத்து வருகிறது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம்தாகூர் தெரி வித்தார். சிவகாசி அருகே மீனம் பட்டியில் உள்ள ஆரம்ப பள்ளியில் மாணவர்களைச் சந்தித்து உரையாடிய மாணி க்கம்தாகூர் பத்திரிகையா ளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறிய தாவது: கடந்த ஒன்பது ஆண்டுகளாகப் பட்டாசுத் தொழிலைச் சீர்குலைத்தது வருவது பாஜக அரசு தான். மோடியும் பாஜகவும் செய்த துரோகத்தைச் சிவ காசியில் உள்ள லட்சக் கணக்கான தொழிலாளர்க ளும் உற்பத்தியாளர்களும் நன்கு அறிவார்கள். ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சுற்றுச் சூழல் மாசு மற்றும் பல மாநி லங்களில் விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிப்பு எனத் தொடர்ந்து பட்டாசுத் தொழிலைச் சீர் குலைத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. பட்டாசுத் தொழிலை உலக அளவில் கொண்டு செல்ல எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஏற்றுமதி மண்ட லங்களுக்கு அனுமதி தரவில்லை. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதானியின் பண உதவியுடன் தான் யாத்திரை செல்கிறார். இதற் கான செலவுக் கணக்கை அவர் பொது வெளியில் வெளியிட வேண்டும் என்றார். இந்தச் சந்திப்பின்போது, சிவகாசி சட்டமன்ற உறுப்பி னர் ஜி.அசோகன், மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத் தம்பி, மாவட்ட செய்தித் தொடர்பாளர் மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணமூர்த்தி, முருகன்,பைபாஸ் வைரக் குமார், தர்மராஜ் ஆகியோர் ஆகியோர் உடனிருந்தனர்.
கரையை உடைத்து கண்மாய் தண்ணீரை முழுமையாக வெளியேற்றியதற்கு எதிர்ப்பு
கண்டமனூர், ஆக.14- கரையை உடைத்து கண்மாய் தண்ணீரை வெளியேற்றிய ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனத் தேனி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே எட்டப்பராஜபுரம் ஊராட்சியில் வேலாயுத புரம் கண்மாய் அமைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்மாயில் சீரமைப்புப் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாகக் கண்மாய் தூர்வாரப்பட்டுக் கரைகள் பலப்படுத்தப்பட்டது. தொடர்ந்து கரைகளைச் சுற்றி கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணிக்காகக் கரைகளின் ஓரத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் கலவையைக் கொட்டுவதற்காகப் பலகைகள் அடைக் கப்பட்டது. இதற்கிடையே கடந்த வாரம் கண்ட மனூர் பகுதியில் பெய்த கனமழை காரண மாகக் கண்மாய்க்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணிகள் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பணிகளை மேற்கொண்டுவரும் ஒப்பந்த தாரர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கண்மாய்க் கரையின் குறிப்பிட்ட பகுதியை உடைத்து நீரை வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டார். அப்போது கால்நடைகள் வளர்ப்போர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். கண்மா ய்க்கு உள்ளேயே பள்ளம் தோண்டி அதில் நீரை நிரப்பி வைத்து பணிகளைத் தொடர வேண்டும் என ஆலோசனை கூறி யுள்ளனர். இதை ஏற்க மறுத்த ஒப்பந்த தாரர் கரையை உடைத்து கண்மாயில் உள்ள நீரை முழுமையாக வெளியேற்றி யுள்ளார். இது தொடர்பாகத் தமிழ்நாடு விவசாயி கள் சங்க தேனி மாவட்டச் செயலாளர் கண்ணன் தலைமையில் விவசாயிகள் ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். மனு வைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கட்சியினர் திங்கள்கிழமை கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகத்தில் ஆணை யரிடம் புகார் மனு அளித்தனர்.