districts

img

திருமங்கலம் நகராட்சி 17-ஆவது வார்டு: ஒரு வாக்குச்சாவடியில் மறு தேர்தல்

மதுரை, பிப்.21- கடந்த சனிக்கிழமை நடை பெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டம் திரு மங்கலம் நகராட்சி 17-ஆவது வார்டில் உரிய படிவத்தில் சுமார் 170 வாக்காளர்களிடம் தேர்தல் அதிகாரி கையெழுத்துப் பெற வில்லை. இதையடுத்து இந்த வார்டில் குறிப்பிட்ட (17-பெண் கள்) வாக்குச்சாவடியில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் உத்த ரவிட்டது. இதையடுத்து திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி யில் மறுதேர்தல் திங்களன்று நடைபெற்றது. வாக்குச் சாவடி யை தேர்தல் பார்வையாளர் கமல் கிஷோர் ஆய்வு செய்தார். காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்னி, காவல் கண்கா ணிப்பாளர் வி.பாஸ்கரன் ஆகி யோர் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர். சுமார் 200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டனர். வாக்காளரின் இடது கை நடுவிரலில் அழியாத மை வைக்கப்பட்டது. காலை ஏழு மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது.