districts

img

தேனி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு - கண்காணிப்புக்குழுக் கூட்டம்

தேனி, நவ.11- தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில், மாவட்ட  வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நவம்பர் 9 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன்  முன்னிலையில், கண்கா ணிப்பு குழு தலைவரும், தேனி நாடாளு மன்ற உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்  தலைமையில் நடைபெற்றது.     அரசின் திட்டங்கள் செயல்படுத்து வதில் ஏதேனும் குறைபாடுகள் இருப் பின் அரசு அலுவலர்கள் எனது கவ னத்திற்கு உடனடியாக கொண்டு வரும் போது, அதற்கான உரிய நடவ டிக்கைள் மேற்கொள்ளப்படும். அத னைப்போன்று, ஊராட்சி மன்றத்தலை வர்கள் உட்பட உள்ளாட்சி பிரதிநிதி கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை கள் மீது தனிக்கவனம் செலுத்தி அதன்  மூலம் உரிய நடவடிக்கைள் மேற் கொள்ளப்படும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு, அனைத்து துறை  அலுவலர்கள் முனைப்போடு பணி யாற்றிட வேண்டும் என கண்காணிப்பு குழு தலைவரான தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சித்தலைவர் க.பிரிதா, மாவட்ட  வருவாய் அலுவலர் தி.சுப்ரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை யின் திட்ட இயக்குநர் இரா.தண்ட பாணி மற்றும் ஊராட்சி ஒன்றி யக்குழுத்தலைவர்கள், துணைத்தலை வர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.