தேனி, ஜூன் 12- தேனியில் விபத்தில் சிக்கிய முதியவரை மீட்ட தேனி ஆட்சியர் க.வீ.முரளீதரன் ,அவரை சிகிச்சைக்காக மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தார். தேனி-அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் ஜூன் 12 ஞாயிறு காலை மாவட்ட ஆட்சியர் க.வீ.முரளீதரன் 30-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பங்களாமேடு பகுதி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதி சாலையில் முதியவர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத் தில் சிக்கியதை கண்ட மாவட்ட ஆட்சியர், அவரை உட னடியாக மீட்டு, ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.