விருதுநகர், டிச.3- விருதுநகர் சந்தையில் நல்லெண் ணெய் விலையானது அடிக்கடி உயர்த்தப் படுகிறது. இதனால், பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டி யல் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வரு கிறது. அதில் நல்லெண்ணெய் விலையா னது திடீரென அதிக அளவில் உயர்த்தப் பட்டுள்ளது. கடந்த வாரம் 15கிலோ நல் லெண்ணெய் விலை ரூ.5610க்கு விற்கப் பட்டு வந்த நிலையில், இந்த வாரம் டின் ஒன்றுக்கு ரூ.165 உயர்ந்துள்ளது. எனவே, அதன்படி டின் ஒன்று ரூ.5775 என்ற விலை யில் தற்போது விற்பனை செய்யப்படு கிறது. இதனால், வாடிக்கையாளர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாமாயில் மேலும், பாமாயில் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிகரித்துள் ளது. அதாவது, கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் விலையானது ரூ.1530 என்ற அள வில் விற்கப்பட்டது. இந்த வாரம் ரூ.40 உயர்த்தப்பட்டு ரூ.1570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மல்லி மல்லி விலையானது சற்று குறைந்துள் ளது. கடந்த வாரம் 40கிலோ மல்லி மூடை யின் விலை ரூ.4700-4900 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மூட்டை ஒன்றுக்கு ரூ.200 குறைந்துள்ளது. அதன்படி, ரூ.4500-4700 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. உருட்டு உளுந்து இதேபோல், 100 கிலோ உருட்டு உளுந் தம் பருப்பு ( நாடு) ரூ.10,800க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், இந்த வாரம் ரூ.200 குறைக் கப்பட்டு தற்போது ரூ.10600க்கு விற்பனை யாகிறது. மேலும், உருட்டு உளுந்து ( பர்மா எப்.எ.க்யூ) மூட்டை ஒன்றுக்கு ரூ.8,700க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.300 வரை குறைக்கப்பட்டு ரூ.8,400-க்கு விற்பனையாகிறது. அதேவேளை, பிற உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.