districts

மதுரை முக்கிய செய்திகள்

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் விரைவில் அமல்

மதுரை, ஆக.25-  மதுரை மாவட்டம் ஊரகப் பகுதிகளில் கஞ்சா கடத்த லைத் முற்றிலும் தடுக்க ஊரகக் காவல்துறை சார்பில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை ஊரகக் காவல் துறை விரைவில் அமல்படுத்த உள்ளது. ஊரகப்பகுதிகளில் அதிகரித்து வந்த கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் கடத்தலை தடுக்க காவல்துறை யினர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கை காரணமாக தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், ஊரகப் பகுதிகளில் ஏற்படும் கஞ்சா கடத்தலைத் தடுத்து நிறுத்திய ஊரகக் காவல்துறை, மதுரை மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டத் தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்த உள்ளனர்.  கண்காணிப்பு கேமராக்கள் பல்வேறு குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள னர். எனவே ஊராட்சிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதன் மூலம் கிராமப் பகுதிகளில் நடைபெறும் குற்றச்சம்பவங்கள், முன்விரோத மோதல்கள், ஜாதிய மோதல்களை கட்டுப்படுத்த முடியும்.  மேலும் இதுதொ டர்பாக ஊரகப் பகுதிகளில் உள்ள 40 காவல்நிலை யங்களின் ஆய்வாளர்கள் மூலம் 420 கிராம ஊராட்சித் தலைவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் திட்டம் பற்றி விளக்கப்பட்டுள்ளது.  மேலும் மதுரை மாவட்டத்தில் உள்ள 420 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி நிதி அல்லது நன்கொடை யாளர்கள் மூலம் கண்காணிப்புக் கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் ஊராட்சித் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக 2 வாரங்கள் கால அவகாசமும் கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அளிக் கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மக்களின் பட்டா நிலங்கள் ஆக்கிரமிப்பு

சிவகங்கை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

மதுரை, ஆக.25-  சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் பகுதியில் ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கிய பட்டா நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒக்கூர் பகுதியை சேர்ந்த ராஜகிரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை யில் மனு ஒன்றினை தாக்கல் செய்தி ருந்தார். மனுவில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களின் நலனுக்காக எனக்கு சொந்தமான நிலத்தை மயானம் அமைக்க வழங்கி யுள்ளேன். மேலும் அரசு ஆதிதிராவிட மக்கள் பயன்பாட்டிற்கு நிலங்கள் வழங்கி உள்ளது. அதன் மூலம் அவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.  இந்நிலையில், எங்கள் கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் பட்டியலில் சமூக மகளுக்கு அரசு ஒதுக்கிய இடத்தில் நிலத்தை ஆக்கிர மித்து உள்ளார். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகளுக்கு ஆக்கிரமிப்பு இடங்களை மீட்க மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, அரசு நிலத்தை சட்டவிரோ தமாக ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு, ஆக்கிரமிப்பை அகற்றி ஆதிதிராவிடர் பயன்பாட்டிற்கு வழங்க உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த நிலையில், மனு மீதான வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பரத சக்கரவர்த்தி முன்பு புதனன்று  விசாரனைக்கு வந்தது.  மனு தாரர் தரப்பில் வழக்கறிஞர்  ஆஜராகி பட்டியலின மக்களுக்கு சொந்த மான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட தற்கான ஆவணங்களை தாக்கல் செய்தார். இதனை சரிபார்த்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பு குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதில் மனு தாக்கல்  செய்ய உத்தரவிட்டு வழக்கு விசார ணையை ஒத்திவைதனர்.

வரைவு வாக்குச்சாவடி மையங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம்

மதுரை, ஆக.25-  மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் வரைவு வாக்குச்சாவடி மையங்கள் பட்டியல் வெளி யிடுதல் மற்றும் புதிய வாக்குச் சாவடி அமைத்தல் குறித்து அரசு அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சியினர்களு டனான கலந்தாய்வு கூட்டம் வியாழனன்று நடைபெற்றது.  கூட்டத்தில், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலு வலர்கள் வரைவு வாக்குச் சாவடி மையங்களையும் நேரடி யாக களப்பணி செய்து அடிப்படை வசதிகள் மற்றும் கட்டிட உறுதித்தன்மை உள் ளதை உறுதி செய்திட வேண்டும். மதுரை மாவட்டத் தில் உள்ள 2718 வாக்குச் சாவடிகளில் 1500-க்கும் மேற்பட்ட வாக்காளர்களை கொண்டுள்ள பாகங்களை 2 பாகங்களாக பிரித்திட நட வடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.  அனைத்து வாக்குச்சாவடி களும் இருபாலர்களுக்கான வாக்குச்சாவடிகளாக அமைக் கப்படும். மேலும், வரைவு வாக்குச்சாவடி மையங்களில் இடம் மாற்றம், பெயர், மாற்றம், புதிய வாக்குச்சாவடி அமைத்தல் ஆகியவை குறித்து அரசியல் கட்சியின ரின் கருத்துகளைப் பெற்று 31-ம் தேதிக்குள் வாக்குப் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்குப்பதிவு அலுவ லர்கள் பணிகளை முடித்திட அறிவுறுத்தப்பட்டது.  மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக ளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த சிறப்பு முகாம்கள் நவம்பர் 4, 5, 18, 19 ஆகிய தேதிகளில் (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழ மை) நடைபெற உள்ளன. எனவே பொதுமக்கள் முகாம்களை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், பெயர் திருத்தம், முகவரி திருத்தம் ஆகியவை குறித்து விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தெரிவித்துள்ளார்.

விருதுநகரில்  இன்று சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

விருதுநகர், ஆக.25- முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை யொட்டி சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் சனியன்று ஆக. 26ல் ஸ்ரீவித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடை பெற உள்ளது. இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறு வனங்கள் கலந்து கொள்கின் றன. எனவே, அதில்,  8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ள மோ ஆகிய கல்வி தகுதி உடை யவர்கள் பங்கேற்கலாம்.   மேலும், இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பு வோர்,  வேலைவாய்ப்பு அடை யாள அட்டை,  அனைத்து கல்விச் சான்றுகளின் நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய வற்றுடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரி வித்துள்ளது.

காலிப் பணியிடங்களை  நிரப்பக் கோரி ஆர்ப்பாட்டம் 

காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்பி டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (சிஐடியு) சார்பில் மதுரை மண்டல அலுவலகம் முன்பு வெள்ளியன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் துணைத் தலைவர் என்.கல்யாணக் குமார் தலைமை வகித்தார். மண்டலச் செயலாளர் எம்.அழகு லட்சுமணன், ஆர். செல்லமணி, பால்பாண்டி, சௌந்தரபாண்டி, பஞ்சு  ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் கே.கதிரேச பாண்டியன் துவக்கி வைத்தார். சிஐடியு மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.லெனின் வாழ்த்திப் பேசினார். மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் கே.சண்முகம் நிறைவு செய்து பேசினார்.  சிவகங்கை  சிவகங்கையில் டிஎன்சிஎஸ்சி மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மண்டலத் தலை வர் திருவளர்ச்செல்வன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் புவனேஷ்வரன், மண்டல செயல் தலைவர் பாலசுப்பிரமணியன், மண்டல செயலாளர் சுரேஷ்குமார் ஆகியோர் பேசினர். 

பழனி விபத்தில் மாணவர் பலி

பழனி பழனியாண்டவர் தொ ழில்நுட்பக் கல்லூரியில் படித்து வரும் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் காரில் கொடைக்கானல் சென்றுள்ளனர். அப்போது வரட்டாத்து பாலத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூர்த்தி என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பலியா னார். மற்ற 3 மாணவர்கள் காயங்க ளுடன் பழனி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டுள்ளனர்.

நத்தம் அருகே பெண் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (48). இவரது மனைவி ஜெயந்தி (44). இவர்களின் மகளுக்கு 2 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது.  இந்த நிலையில், திருமணத்துக் காக நத்தம் அவுட்டர் பகுதியில் உள்ள மளிகை கடையில் புதனன்று இரவு பொருட்கள் வாங்கி விட்டு, கணவன், மனைவி 2 பேரும் மளிகை கடைக்கு  வெளியே நின்று கொண்டு இருந்த னர். அப்போது நத்தத்தில் இருந்து மெய்யம்பட்டிக்கு இருசக்கர வாகனத் தில் சென்ற சூரிய பிரசாத் (22) என்ப வர் ஓட்டி வந்த வாகனம் அவர்கள் மீது மோதியது.  இதில் பலத்த காயமடைந்த ஜெயந்தி நத்தம் அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஜெயந்தி உயிரிழந்தார். 

மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள பெரிய ஆலங் குளம் கிராமத்தை சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி பாலமுருகன் (40). இவருக்கு திருமணமாகி ஜோதி மணி என்ற மனைவியும், 2 மகன்க ளும், ஒரு மகளும் உள்ளனர்.  இந்நிலையில், பெரிய ஆலங் குளம் பகுதியில் உள்ள குளியல் தொட்டிக்கு வெள்ளியன்று காலை குளிக்க சென்றுள்ளார். தொட்டியில் தண்ணீர் இல்லாததால், தண்ணீரை நிரப்ப மின்சார பெட்டியில் சுவிட்சை இயக்க முயன்றுள்ளார்.  அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில், மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் பால முருகனின் உடலை திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.