மதுரை, மார்ச் 19- நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேட்டை தட்டிக்கேட்டதால் விவ சாயிகள் சங்க தலைவரை தாக்கியவர் களை கைது செய்யக்கோரி மேலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா பதினெட்டாங்குடியை சேர்ந்தவர் வீ. அடக்கி வீரணன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்டப் பொருளாளராக உள்ளார். இவரிடம் நெல் கொள்முதல் நிலையத்தில் சிப்பத்திற்கு 80 ரூபாய் கேட்டுள்ளனர். 89 சிப்பம் நெல் கொடுத்த அடக்கி வீரணன் ,பணம் தர மறுத்துள் ளார். கட்டாயம் தர வேண்டும் நெல் கொள்முதல் நிலையத்தில் கூறியுள்ள னர். இவர் தர முடியாது என்று கூறி, கொடுத்த நெல்லிற்கு ரசீது கேட்டுள ளார். மறுநாள் தருவதாக கூறிய அதி காரி, காலம் கடத்தி ரசீது கொடுக்க மறுத்து வந்துள்ளார். இதனால் மார்ச் 16 அன்று மதுரை நுகர்பொருள் வாணி பக்கழக மண்டல மேலாளரை சந்தித்து புகார் அளித்துள்ளார். அங்கே 4 ஆம் தேதி நெல் போட்டதிற்கு 9 ஆம் தேதி பில் போடப்பட்டிருந்தது. மேலும் 89 சிப் பத்திற்கு பதில் 83 சிப்பத்திற்கு மட்டுமே பில் போடப்பட்டிருந்தது, அதாவது 6 சிப்பம் அவருடைய கணக்கில் குறைத்து காட்டி திருடப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையத்தில் நடந்த ஊழலை தட்டிக் கேட்டதற்காக வும், புகார் அளித்தார் என்பதற்காகவும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் வீ.அடக்கிவீரணை தாக்கி யுள்ளனர். தாக்குதல் நடத்திய பதி னெட்டாங்குடியைச் சேர்ந்த சதீஸ் என்பவரை கைது செய்யக் கோரியும் நெல் கொள்முதல் நிலையத்தில் நடக் கும் ஊழல், முறைகேட்டை தடுத்து விவ சாயிகளுக்கு உரிய பலன் கிடைக்க மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று வலி யுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மேலூர் தாலுகா குழு சார்பில் மார்ச் 19 ஞாயிறன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பட்டதிற்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் துணைத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ஏ.இராஜேஸ்வ ரன், மாவட்டப் பொருளாளர் வீ.அடக்கி வீரணன், பி.எஸ்.ராஜாமணி, கரும்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் கரு.கதிரேசன், சிஐடியு தாலுகாச் செயலாளர் வி.சேகர், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தாலுகாச் செயலாளர் ஏ.தனசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலூர் தாலுகாச் செயலாளர் எம்.கண்ணன் போராட்டத்தை ஆதரித்துப் பேசினார். சங்கத்தின் மாவட்டச் செய லாளர் எஸ்.பி.இளங்கோவன் நிறை வுரையாற்றினார். சிஐடியு தாலுகாத் தலைவர் எஸ்.பி.மணவாளன் மற்றும் பலர் பங்கேற்றனர்.