districts

img

பேருந்து நிறுத்தங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவலம் : கூடுதல் நகர் பேருந்துகளை இயக்கிட வேண்டும்

மதுரை, மார்ச். 21-    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மாநகர் செயலாளர் மா. கணேசன்  விடுத் துள்ள செய்தியில்  கூறியிருப்பதாவது,   மதுரை மாநகருக்குள்ளும்  புறநகர் பகுதி களிலும்  பொன்மேனி , எல்லீஸ்நகர் , புதூர், மதுரை நகர் , திருப்பரங்குன்றம் , திருப்பு வனம் ஆகிய பணிமனைகளிலிருந்து சுமார் 300 நகரப் பேருந்துகள் - வாடிப்பட்டி . காரி யாப்பட்டி , திருப்புவனம் , அலங்காநல்லூர், சோழவந்தான். ஊமச்சிக்குளம் , விரகனூர் ஆகிய முக்கிய வழித்தடங்களில் பல இடங்க ளுக்கு இயக்கப்படுகிறது . காலை நேரங்க ளில் அனைத்து நகரப் பேருந்துகளும் இயக்கப்பட்டாலும் , மதியம் மற்றும் பிற்பகல் நேரங்களில் பேருந்துகள் இயக்கும் எண்ணிக்கை குறைவாக உள்ளது . மதுரை மாநகரிலிருந்து முக்கிய வழித்தடங்களில் - பிற்பகலில் பேருந்துகள் இயக்கப்படுவது குறைவாக இருக்கும் காரணத்தினால்  பேருந்து நிலையங்களிலும் , பேருந்து நிறுத்தங்களிலும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது . அதேபோல் , மகளிர் கட்டணமில்லா பேருந்துகள் பயன்படுத்தும் பெண்கள் - பேருந்து இயக்கம் குறைவாக உள்ள தால் கூட்ட நேரிசல் ஏற்படும் சூழல் உருவாகி யுள்ளது .

நீண்ட நேரம் காத்திருந்து பயி க்கும் அவலநிலை உருவாகியுள்ளது . மதுரை மாநகரில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் படிக்கட்டுகள் உயரமாக உள்ளதால் வயதானவர்கள் , பெண்கள் பேருந்தில் ஏறுவதற்கு சிரமப்படுகின்றனர். எனவே , படிக்கட்டுக்கள் தாழ்வாக உள்ள வாறு மாற்றியமைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் . மதுரை நகரில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளில் ஒரு சில பேருந்துகளில் கைப்பிடிகள் இல்லாத நிலை , பேருந்தின் தகரங்கள் உடைந்துள்ள நிலை . பெயர் பலகை தெளிவாக தெரியாத நிலை , இரவு நேரங்களில் பேருந்துகளில் போதுமான விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து இருக்கும் நிலை என பராமரிப்பு இல்லாத நிலையில் இயக்கப்படுகிறது .  மேலும் , பேருந்துகள் ஆங்காங்கு நிற்கும் அவலம் உள்ளது . பேருந்து இருக்கைகள் உள்பட அனைத்தும் சேதமடைந்து காணப் படுகிறது . நகரப் பேருந்துகளில் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது . எனவே , நகரப் பேருந்துகள் பராமரிப்பை உறுதிப்படுத்துவதுடன் கூட்ட நெரிசலை தவிர்த்திடவும் , நீண்டநேரம் பொதுமக்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் நிலை யை மாற்றிடவும் கூடுதலான பேருந்துகளை இயக்கிட தமிழக அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.