districts

மாற்றுத்திறனாளிகளை கண்ணியக் குறைவாக நடத்தும் திண்டுக்கல் மாவட்ட அலுவலர்

திண்டுக்கல், ஜூன் 6- மாற்றுத்திறனாளிகளிடம் கண்ணியக் குறைவாக நடந்து கொள்ளும் அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு அனைத்த வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் நல உரிமைகளுக்கான சங்கம் சார்பாக புகார் மனு அனுப்பப்பட்டது. இது தொடர்பாக சங்கத்தின் திண்டுக் கல் மாவட்ட தலைவர் ஜெயந்தி, மாவட்ட  செயலாளர் பகத்சிங் ஆகியோர் அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மாற்றுத்திற னாளிகள் அலுவலகத்திற்கு செல்லும் மாற்  றுத்திறனாளிகள் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கிறார்கள். அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகளை ஒரு மையில் பேசுவதும் நாள் கணக்கில் காக்க  வைப்பதும் தொடர்கதையாக உள்ளது. தொப்பம்பட்டி ஒன்றியம் 54 புதூர் கிரா மத்தை சேர்ந்த ராஜகுமாரி என்பவரின் 14  வயது மதிக்கத்தக்க மனவளர்ச்சி குன்றிய நிதிஷ்குமார் என்கிற சிறுவன் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம் இறந்துவிட்டார். மாற்றுத்திற னாளிகள் இயற்கை மரணம் அடைந்தால் 17 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்  படும் என்கிற அடிப்படையில் கடந்த ஆண்டு  மே மாதமே இறப்பிற்கான நிவாரணத் தொகை வழங்க கேட்டு உரிய ஆவணங்  களுடன் திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திற னாளிகள் அலுவலகத்தில் ராஜகுமாரி விண்ணப்பித்துள்ளார்.

மனுவினை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், நிவார ணத்தொகை வந்தவுடன் தங்களை அழைக்  கிறோம் எனக்கூறி அனுப்பி வைத்துள்ள னர். சில மாதங்கள் கடந்த பிறகும் பணம் வர வில்லை எனக்கூறி ராஜகுமாரி மீண்டும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திற்கு சென்று அலுவலக ஊழியர் நந்தினியிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் சரி யான பதில் கூறாமல் அடுத்த மாதம் வரச்  சொல்லி அனுப்பி இருக்கிறார். இப்படியாக அவரை பலமுறை நந்தினி அலைக்கழித் துள்ளார். இதனால் மிகுந்த மன வருத்தத்திற்குள்ளாகிய ராஜகுமாரி, ஏன்  இப்படி என்னை அலைய வைக்கிறீர்கள் எனக்கூறி கேட்டுள்ளார். அவரது நிலைமை யை உணராத நந்தினி, ராஜகுமாரியை ஒருமையில் பேசியதோடு தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். நீங்கள் மனுவே கொடுக்கவில்லை. புதி தாக மனு கொடுங்கள். கிராம நிர்வாக அலு வலரிடம் கையெழுத்து பெற்று வாருங்  கள் என்றெல்லாம் கூறி அலைக்கழித்துள் ளார்கள். அதன் பிறகு ராஜகுமாரி நேரடி யாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள் ளார். இதனால் பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த நந்தினி போலியாக ஒரு மனு வை தயார் செய்து அம்மனுவானது இந்த  ஆண்டு ஏப்ரல் மாதம் தான் ராஜகுமாரி அளித்துள்ளார். அதனால் இவரது மனு வானது வரிசை எண் 13ல் உள்ளது எனக் கூறி பொய்யான தகவலை மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தெரிவித் துள்ளார்.

 

இவர் மட்டுமின்றி அங்கு ஒப்பந்த பணி யாளராக பணியாற்றும் தனபால் என்ப வர் ஒவ்வொருமுறை வரும்போதும் ராஜ குமாரியின் கணவரிடம் இறப்பிற்கான நிவா ரணத் தொகையை நான் விரைவில் பெற்  றுத்தருகிறேன் என்று கூறி ரூ. 100 முதல் ரூ.  500 வரை லஞ்சமாக பெற்றுள்ளார். ஆனா லும் நிவாரணத் தொகை கிடைக்கவில்லை.  இதனால் மிகுந்த மன வருத்தத்திற்கு உள்  ளான ராஜகுமாரி தன்னுடையை நிலையை விளக்கி சமூக வலைதளங்களில் கண்ணீர்  மல்க வேதனையுடன் கடந்த இரண்டு  தினங்களுக்கு முன்பாக காணொலியில்  வெளியிட்டுள்ளார். இந்த காணொலியா னது சமூக வலைத்தளங்களில் வைரலா னத்தை தொடர்ந்து மாநில மாற்றுத்திறனா ளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆகிய இருவரும் தலையிட்டு உடனடியாக இறப்  பிற்கான நிவாரண தொகை வழங்க நட வடிக்கை எடுத்ததன் பலனாக கடந்த 2.06.23 அன்று காசோலையாக 17 ஆயிரம்  ரூபாய் ராஜகுமாரியிடம் வழங்கப்பட்டுள்  ளது. இந்த அரசுக்கு அவப்பெயரை ஏற்  படுத்த வேண்டும் என்பதற்காகவே இது போன்ற அதிகாரிகள் செயல்படுகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. எனவே முத லமைச்சராகிய தாங்கள் இவ்விசயத்தில் உடனடியாக தலையிட்டு தரக்குறைவான, கண்ணியக்குறைவான வார்த்தைகளை பேசிய நந்தினி மீதும் மனவளர்ச்சி குன்றிய  மாற்றுத்திறனாளி என்றுகூட பார்க்காமல் லஞ்சமாக பலமுறை பணம் பெற்ற ஒப்பந்த  ஊழியர் தனபால் மீதும் நடவடிக்கை எடுப்ப தன் மூலமாக இதுபோன்ற அதிகாரி களுக்கு ஒரு பாடமாக அமையும் வகையி லும் இனிமேல் இதுபோன்ற தவறுகள் செய்யாமல் மாற்றுத்திறனாளிகளை பாது காக்கும் வகையிலும் தாங்கள் நடவடிக்கை எடுத்து மாற்றுத்திறனாளிகளை பாது காக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.