மதுரை, டிச.14- மதுரை மாவட்டம் மேலூர் அருகே நல்லசுக்காம்பட்டியில் பழுவட்டான் கண்மாயில் தொடர்மழை காரணமாக உடைப்பு ஏற்பட்டது. இதனால் நல்ல சுக்காம்பட்டி பகுதியில் உள்ள குடியிருப்பு மற்றும் துவக்கப்பள்ளியில் தண்ணீர் புகுந் துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டுள்ளனர். துவக்கப்பள்ளியில் மழைநீர் புகுந்த தால் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்த கண்மாய் உடைப்பு காரணமாக நல்ல சுக்காம்பட்டியில் இருந்து கச்சிராயன்பட்டி சாலை 50 மீட்டர் அளவிற்கு துண்டிக்கப்பட் டுள்ளதால் போக்குவரத்து தடை ஏற்பட்டு கிராம மக்கள் பெரிதும் சிரமமடைந்துள்ளனர்.