சிவகங்கை, மே 30- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேம்பாலம் புற வழிச்சாலையில் முனியாண்டி கோயில் அருகே அமைக் கப்பட்டுள்ள மதுரை-இராமேஸ்வரம் நெடுஞ்சாலை பயணிகள் நிழற்குடையை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் திறந்து வைத்தார். மதுரையிலிருந்து மானாமதுரைக்கு பேருந்தில் வருகிறவர்கள் பெரும்பாலோர் முனியாண்டி கோவில் அருகே இறங்கி ஊருக்குள் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக் குமார் பயணிகள் நிழற்குடை அமைத்து, திறந்து வைத்தார். இதற்காக சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார்க்கு மானாமதுரை மக்கள் நன்றியை தெரிவித்தனர்.