மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி நிர்வாகி எஸ்.முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் எஸ்.ஷேக்நபி வரவேற்றார். மதுரை வடக்குத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.