மதுரை, டிச.12- திருக்குறளின் 108 அதிகாரங்களை பாட மாக்குவது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை முறையாக நடை முறைப்படுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ராம்குமார் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “2017-ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருள்பாலின் 108 அதிகாரங்களில் உள்ள 1050 திருக்குறள்களை 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடத்திட்டத் தில் சேர்க்க வேண்டுமெனக் கூறியிருந் தது. ஆனால், அது பெயரளவில் மட்டுமே உள்ளது. மொத்தமே 30 முதல் 60 திருக் குறள்கள் மட்டுமே கற்பிக்கப்படுகிறது. திருக்குறளை 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத் தில் சேர்க்கவும், தேர்வில் திருக்குறள் சம்பந்தமான கேள்விகள் இடம் பெறச் செய்வது தொடர்பாக அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிம் 108 அதிகாரங்க ளில் உள்ள 1050 திருக்குறள்களை பொருளு டன் இடம் பெறச்செய்ய உத்தரவிட வேண் டும். தேர்விலும் திருக்குறள்கள் சம்பந்த மான கேள்விகள் இடம் பெற உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த மனுவை திங்களன்று விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு, “இது தொடர்பாக உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவையும், அதன டிப்படையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணை யையும் முறையாக நடைமுறைப்படுத்தி, அது தொடர்பான அறிக்கையை மூன்று மாதங்களில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்த னர்.