districts

img

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்   591 மதிப்பெண்களும் மாணவி கௌசிகா 554 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி

மதுரை ஆனையூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மாணவி ரிதியுஷா உதயராஜ் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில்   591 மதிப்பெண்களும் மாணவி கௌசிகா 554 மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இவர்கள் இருவரும் தமிழ் பேச்சுப் போட்டிகளில் மாநில அளவில் பல பரிசுகளையும் வென்றுள்ளனர். மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, வாழ்த்துக்களை தெரிவித்து, பரிசுகள் வழங்கினர். இதில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் டி. செல்வா, பொருளாளர் எஸ். வேல் தேவா, தெற்கு வாசல் பகுதிக்குழு செயலாளர் போனிபேஸ், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் க. பாலமுருகன், தலைவர் டேவிட் ஆகியோர் கலந்து கொண்டனர்