districts

img

பெட்ரோல் - டீசல் விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்

மதுரை/விருதுநகர்/சிவகங்கை, ஏப்.5- பெட்ரோல், டீசல், கேஸ் மற்றும் டோல் கேட் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் விருதுநகர், சிவகங்கை, திண் டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இராஜபாளையம் நகர் சோழராஜபுரம் கிளை சார்பில் மக்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் நகர் செயலாளர் மாரியப்பன், மாதர் சங்க நகர் தலைவர் மைதிலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கூமாபட்டியில் எம். ஜி.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம். சுந்தரபாண்டியன், மாவட்டக்குழு உறுப்பி னர் ஜெயக்குமார் ஒன்றியச் செயலாளர் பெனரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்  மம்சாபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கேஅர்ஜூனன்,  ஒன்றியச் செயலாளர் சசிகுமார்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏழாயிரம் பண்ணையில் ஒன்றியக் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவ சாயிகள் சங்கத் தலைவர் கே சுப்பாராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.சரோஜா உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

சிவகங்கை
சிவகங்கை மாவட்டம்  காரைக்குடியில் தாலுகா செயலாளர் அழகர்சாமி, கல்ல லில் ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், காளையார்கோவிலில் ஒன்றியச் செயலா ளர் தென்னரசு, தேவகோட்டையில் தாலுகா செயலாளர் செல்வராஜ், திருப்பு வனத்தில் பாண்டி  ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மோகன், முத்துராமலிங்க பூபதி, மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
மதுரை
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் கிளைச் செயலாளர் செந்தில்ராஜா தலைமையில்   நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் எம்.ஜெயகுமார், டி.ஏ.இளங்கோவன், ஆர் ராமகிருஷ்ணன்,   மா.செந்தில்குமரன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சமயநல்லூரில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு பி.நாகேந்திரன் தலைமை வகித்தார்.  மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா, ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந் தம், கிளைச் செயலாளர் செல்லமுருகன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.பால கிருஷ்ணன், சி.மலர்விழி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சோழவந்தானில் ஒன்றியச் செயலா ளர்  ஏ.வேல்பாண்டி தலைமையில்   நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். அலங்காநல்லூரில் ஒன்றியச் செயலாளர் எஸ்.ஆண்டிச்சாமி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வி.உமா மகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செல்லம்பட்டி ஒன்றியக்குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஜெ.காசி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர்  பி.எஸ்.முத்துப்பாண்டி ஒன்றியச் செய லாளர்  வி.பி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். மேலூரில் தாலுகாகுழு உறுப்பினர் வி.அடக்கிவீரணன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாநிலக்குழு உறுப் பினர் எஸ்.பாலா, தாலுகா செயலாளர் எம்.கண்ணன் உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர். அவனியாபுரம் தாலுகா குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாச் செயலாளர் ஏ.தனபாலன தலைமை வகித்தார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேசினார்கள்.
மாதர் சங்கம்
மாதர் சங்கம் சார்பில் மதுரை கரி மேடு-மோதிலால் பிரதான சாலையில் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஒப்பாரி வைத்து  போராட்டம் நடைபெற்றது. மூத்த தோழர் அங்கயற்கண்ணி, மாமன்ற உறுப்பினர் வை. ஜென்னியம்மாள்,  மாவட்ட நிர்வாகி ஆர்.பிரீத்தி, மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா, மாவட்டக்குழு உறுப்பினர் மல்லிகா, ஜெயா, அன்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கம்பம்
கம்பம் ஏரியா குழு சார்பாக பைக் உருட்டும் போராட்டம் நடைபெற்றது.  ஏரியா குழு உறுப்பினர் வீ.மோகன் தலைமை யில நடைபெற்ற போராட்டத்தில்  ஏரியா செயலாளர் கே.ஆர். லெனின்,  மாவட்டக் குழு உறுப்பினர் பன்னீர்வேல், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பழனி
பழனி ஆயக்குடியில் துரைசாமி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதில் ஒன்றி யச் செயலாளர் பி.செல்வராஜ் உட்பட ஏரா ளமானோர் கலந்துகொண்டனர். நெய்கா ரபட்டியில் சவுக்கத் அலி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்  எஸ்.கமலக்கண் ணன்  உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட னர்.